tag:blogger.com,1999:blog-13062281800600306412023-11-16T05:57:10.648-08:00சோத்து மூட்டைPARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-87924758472115839782013-02-01T09:49:00.005-08:002013-02-01T09:49:53.303-08:00நான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu3hOVkVHN5CcLz30XRprh3SrSJ7Vdw8wFslpj66QdLO2WiN5HlJhC8Ll33aCE3sumNCQKHgs9M6BfTulfa3s8QZNwaMN53OKFdtvabFnRZdo1xFm6OevR1EhJVPU1MuXY_4iOolWUC8IV/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu3hOVkVHN5CcLz30XRprh3SrSJ7Vdw8wFslpj66QdLO2WiN5HlJhC8Ll33aCE3sumNCQKHgs9M6BfTulfa3s8QZNwaMN53OKFdtvabFnRZdo1xFm6OevR1EhJVPU1MuXY_4iOolWUC8IV/s1600/images.jpg" /></a></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நான் திரும்பி பார்த்த போது , என் போல் பார்த்த சிலரும் உள்ளனர் .</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
என் போல் திரும்பி பார்த்த சிலர் , என் போல் இருக்க தேவையில்லை </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
என் போல் இருப்பவர் எல்லோரும் , நான் திரும்பிய இடத்தில் திரும்ப நியாயமில்லை </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நான் அழுத பொழுதுகள் தனிமை , </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நான் எனக்குள் சிரித்த பொழுதுகள் பலர் அருகிருக்க தனிமை </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
என் போல் , நீ ஏன் அழவில்லை , </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
அன்று மட்டும் நீ சிரித்து இருந்தால் போதும் .</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
ஆழ்ந்ததொரு யோசனையில் எனக்கொன்று தோன்றியது ,</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நான் இது வரை உன்னில் பார்த்தது என்னைத் தான் ,</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நாளை வா , நான் உன்னை உன் போல் பார்க்கிறேன் ,</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
மீண்டும் திரும்பி பார்த்த போது , என் போல் பலர் உள்ளனர் ,</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
அனைவரிடமும் அவர்களை தேடிக் கொண்டு !</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
</div>
<div>
<br /></div>
<span style="font-family: arial; font-size: x-small;"></span></div>
PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-73216495857290763872012-07-08T03:50:00.001-07:002012-07-08T03:50:23.339-07:00விரைவில் சந்திப்போம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நிறைய படித்தேன் , ஒரு வருடத்திற்கும் மேலாக படிப்பதில் இருந்த ஆர்வம் , எழுதுவதில் இல்லாமல் போயிற்று . இங்கும் அங்குமாக வலை பதிவுகளை மட்டும் அவ்வப்போது ரசித்துவிட்டு , புது அலுவலக வேலையில் கொஞ்சம் அதிகமாகவே லயித்துவிட்டிருந்தேன் . இப்போதுள்ள வேலையில் பல்வேறு மாநிலங்களுக்கு பயணிப்பதால் , அனுபவங்களுக்கு பஞ்சமில்லை . பகிர்ந்து கொள்வதற்கும் தயாராகிவிட்டேன் . விரைவில் சந்திப்போம் </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-67980937279871849052011-03-09T09:57:00.000-08:002011-03-09T10:06:03.270-08:00ஐந்து ரூபாய் சொர்க்கம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQBIJJYVA0KXvOUIx5P7pN3CWGaS1OrUd9CsMLho0XNBd795g4A72Trk50_tK20sE2HJfmPSqeYG_eyBKKhApqe6lgCEm14lA9VlLEiefrOOIT16hI_-8GFnkqtCdcnB7oQtrxY3wTz47v/s1600/cigarette-smoke-odor.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQBIJJYVA0KXvOUIx5P7pN3CWGaS1OrUd9CsMLho0XNBd795g4A72Trk50_tK20sE2HJfmPSqeYG_eyBKKhApqe6lgCEm14lA9VlLEiefrOOIT16hI_-8GFnkqtCdcnB7oQtrxY3wTz47v/s400/cigarette-smoke-odor.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5582141790922144642" border="0" /></a><br /> ராஜபாளையம் டவுன் , ஒரு பாடாவதி திரை அரங்கு , நானும் எனது ஒன்னு விட்ட தம்பி அழகரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம் . இடைவேளை நேரம் , இரண்டு தங்க வடிகளை ( கோல்ட் பில்ட்டேர் ) சிகரெட்களை எடுத்தான் , ஒன்னு ஒனக்கு ,இன்னொன்னு யாருக்கு என்று வெகுளி தனமாக கேட்ட என்னை பார்த்து சிரித்தான் அவன் . அன்று முதல் எனக்கு ஒரு ஒன்று விட்ட குட்டி தம்பி கிடைத்தான் . நானும் எனது சிகரெட்டும் , அட அட அட , உரிமையுடன் முதல் சந்திப்பிலேயே ஏன் வாய் வழியே நுழைந்து நெஞ்சை தொட்டு கொஞ்சம் இருமலாக திகட்டினான் .<br /><br /> எனது பஜாஜ் கேலிபர் பைக்கை சரி செய்து , வொர்க் ஷாப்பிற்கு மூவாயிரம் ரூபாய் அழுது , இரு நூறு கிலோ மீட்டர் மலைபாதையில் மிக சிரத்தை எடுத்து ஒட்டி ,குற்றால மலைக்குமேல் உள்ள ஆரியங்காவு தாண்டி ,அம்பா நாடு எஸ்டேட் அடைந்து , அங்கு மனிதரின் கால்தடம் படாத ஒரு அருவியின் முகட்டில் ஏறி நின்றது எதற்காக ?அங்கு அமர்ந்து பனி படலத்துடன் , இயற்கை தாக்கத்துடன் , இரு விரல்களில் தீ ஏற்றி , குளிர் காற்றுடன் புகை பிடித்து , பனி காற்றுக்கு போட்டியாக வெளிவிடும் போது , அட அட அட ,அனுபவத்தால் மட்டுமே புரியும் சுகம் .<br /><br /> கல்லூரி வளாகத்தில் காணாக் கடி , காண்டீன் பின்புறம் மிதப்பு , ரோட்டின் எதிர் புறம் அண்ணன் கடை , மாத முதல் நாளில் சீட்டாடிக் கொண்டு , மாதக்கடைசியில் அதுவே பந்தயப் பொருளாக மாறுவது என , எனது வாழ்வின் அங்கீகரிக்கப்படாத ஒரு அங்கமாகவே வாழ்ந்தது சிகரெட்<br /><br /> அவளிடம் முதல் முறை தைரியமாக சென்று , "இந்த டிரெஸ் நல்லா இருக்குங்க , நீங்க போட்டதுனாலதான் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன் " என்று கை கால் நடுங்க , மனப் பாடம் செய்து ஒப்பித்து விட்டு வெளியே வந்தவுடன் இழுக்கும் முதல் புகை நெஞ்சுக்குள் சென்று என்னன்னவோ செய்தது , அது ஒரு வகை ஆறுதல் அல்லது தேற்றுதல் அல்லது என்னவோ , திட்டாமல் , திமிராமல் நான் இழுத்த இழுப்பிற்க்கு ஆறுதலாய் கரையும் அவள் கூட ஒரு காதலிதான்<br /><br />தேர்வுக்கு முன் , பின்,குடிக்கு முன் ,நடுவே ,பின் , நண்பனைக் கண்டால் ,நட்பு முறிந்தால் , நாகரீகத்திற்கு , வேலை தேடுகையில் சோகத்திற்கு , சோகம் ,ஹ்ம்ம் , மகிழ்ச்சி மற்றும் சோகம் இரண்டும் அளவு மீறும் போது கண்ணீர் மட்டுமே வரும் என்றிருந்தேன் , இப்போது இன்னொன்றும் வருகிறது ,சிகரெட்<br /><br />இப்படியாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த எனது வாழ்க்கை எனும் குட்டி சுவற்றினில் , குட்டி சுவரென்றால் ஏன் தவறாக நினைக்கிறீர்கள் , பெரிய சுவர் போல் குட்டி சுவர் என்று எண்ணுங்கள் , ஒண்ணுக்கு போகும் நாய் குட்டி சுவர் , பெரிய சுவர் என்று பார்த்துக்கொண்டா பெய்கிறது . சரி, குட்டி சுவற்றினில் கொடி முல்லை படரச் செய்ய விருப்பதாக கை பேசி தகவல் சொன்னது , கல்யாண சேதி என்பதைத்தான் அப்படி உவமேய மாக சொல்ல நினைத்தேன் . அன்று கூட எனக்கு தோண வில்லை , ஆனால் அந்த கல்யாண சேதிக்காக அடுத்தநாள் நான் கொடுத்த டிரீட் , அதில் கலந்து கொண்ட கல்யாண சித்தர்கள் , அவர்களின் இயலாமை அறிவுரையாக படமெடுத்து ஆடியது என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது."நம்ம பசங்கள்லையே நீதான் நெறைய தம் மடிப்ப , உன்ன விட ஒண்ணு ரெண்டு கம்மியா அடிச்ச முத்தண்ணாவுக்கே இன்னும் குழைந்த கெடையாது , உனக்கு என்ன ஆகும்ன்னு தெரியலையேடா மச்சான் " என்ற நண்பனை பார்த்து உனக்கு பொறந்ததோட அப்பா யாரு என்று கேட்கலாம் போல் இருந்தது ."அதில்ல மச்சான் , நீ வேணுன்னா நெட்ல பாரேன் , தம்மு நெறையா அடிச்சா , எந்திரிக்காதுன்னு போட்ருக்கான் " என்றான் இன்னொருவன் ,இதற்காக அவர்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கமாக பேன்ட் ஜிப்பை அவிழ்த்து .......... முடியாததால் , அமுக்கி கொண்டு கேட்டு கொண்டேன்<br /><br /> பின்னொருநாள் வருங்கால மனைவியிடம் இரவு நெடு நேரம் பேசி களைப்புற்ற நேரத்தில் , ஏன் இந்த சிகரெட்டை விட்டு விடக் கூடாது என்ற நினைப்பை புகையாய் கரைத்தேன் , ஆனால் புகைந்தது உண்மைதான் . கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன் விட்டு விடலாம் என்று நினைத்து , லாஸ்ட் பப் , பிபோர் பஸ்ட் கிஸ் என்ற வசனத்தை அனுபவிக்க தொடர்ந்தது சிகரெட்<br /><br /> இப்போது மனைவிக்கு தெரியாமல் சிகரெட் பிடிப்பது எப்படி என்ற புத்தகம் எழுதுமளவிற்கு தயாரகிவிட்டிருந்தேன் . இதுவும் ஒரு வித சுகம் தான் .ஆனாலும் சிகரெட் பிடிப்பதை விட வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது .திருப்பதி வெங்கடா சலபதி ஆலயத்தில் ஒரு பத்து மணி நேர காத்திருப்பில் சிறு நம்பிக்கை துளிர்த்தது , சிகரெட் பிடிக்காமல் என்னால் பத்து மணி நேரம் இருக்கமுடியும் , உணர்ச்சி வேகத்தில் எழுமலையான் மீது ஆணையிட்டு மலை இறங்கியவுடன் அதை மீறிவிட்டு , எழுமலையான் கோபத்தில் ஏதாவது கேன்சர் போல கொடுத்து விடுவாரோ என்ற பயத்துடன் சில நாள் அலைந்து கொண்டிருந்தேன்<br /><br /> <wbr> நண்பர்களுடன் அதிரப்பள்ளி அருவிக்கு சென்ற போது இன்னுமொரு உண்மை விளங்கியது , இறங்கும்போது இருந்த வேகம் விறுவிறுப்பு அருவியை பார்த்துவிட்டு ஏறும்போது இல்லை , மாறாக களைப்பு , இளைக்கும் நுரையீரல் என ஒரு நோயாளியாகவே உணர்ந்தேன் ,இதே போல்தான் கிரிகெட் விளையாடிய போது கூட தோன்றியது , அருவி முன் நின்று புகை பிடிக்கும் சுகம் ஒரு பக்கம் என்றால் அதனால் உருவாகும் ரோகங்கள் கொஞ்சம் மனதை பிசயத்தான் செய்தது<br /><br /> விட்டு விடலாம் என்று முடிவு செய்து மூன்று மணிநேரம் ஆயிற்று , நண்பனிடம் சொன்னேன் ," சூப்பர் மச்சான் , நல்ல முடிவு ,ஆனா டக்குன்னு விட்றாத ,அதனால உன்னோட பி பி எகுற வாய்ப்பு இருக்கு , கொஞ்சம் கொஞ்சமா விடு , இன்னைக்கு பத்துன்னா , நாளைக்கு எட்டு ,அடுத்தவாரம் அஞ்சு " என்று சொன்ன அந்த வார்த்தைகளை நம்பி நானும் முயற்சித்தேன் , நாளை அஞ்சாகி ,நாளை மறுநாள் பதினஞ்சாகிவிட்டது.இவர்கள் சொல்வது போல் கொஞ்சம் கொஞ்சமாய் விடுவது என்பது முடியாத ,இயலாத ஒரு காரியம் என்பது நன்றாகவே புரிந்தது .என்ன செய்கிறாய் நண்பா ? நீ புகை பிடிப்பதை விட நினைத்தால் இதற்கு முன் புகை பிடித்து பின் அதை நிருத்தியவனைக் கேள் , அதை விட்டு விட்டு கண்டவனை கேட்டால் எப்படி சொல்வார்கள் ,முன்ன பின்ன செத்திருந்தால் தானே சுடுகாடு பற்றி தெரிந்திருக்கும் , மன்னிக்கவும் , எனது எரிச்சல் அப்படி ,அதனால் தான் பொருந்தாத ஒரு உவமை சொல்ல வேண்டியதாயிற்று , சிகரெட்டை விட முயற்சித்து பாருங்கள் ,அப்போது தெரியும் எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள் என்று . இங்கு ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன் ,தயவு செய்து அறிவுரை சொல்லும் முன் கொஞ்சம் யோசியுங்கள் , நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால் கூட பரவாயில்லை ,அதை தொட்டு கூட பார்க்காமல் ,விட்டு விடு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது . அவ அவனுக்கு வந்தால்தான் தெரியும் வாந்தியும் பேதியும் , மறுபடியும் ஏதோ ஒரு உதவாக்கரை உவமை சொல்ல வைத்து விட்டீர்கள் . அலோ,யாரது , கிண்டலா ? என்னை பார்த்து திருந்தாத ஜென்மங்கள் என்று பாடுவது கேட்கிறது ,நான் திருந்துவதற்கு முயலவில்லை , சிகரெட்டை விட முயற்சிக்கிறேன் , சிகரெட் பிடிப்பது ஒரு பழக்கம் தான் ,கொலை குற்றம் கிடையாது<br /> முருகேசன் மாமா சிகரெட் குடிப்பதில்லை என்று கேள்விப்பட்டு அவரிடம் யோசனை கேட்டேன் . "மாப்ள , வேற ஏதாவது ஒண்ணு பழகு , புகையிலை அதாம்பா ஹான்ஸ் இல்லையின்னா மாணிக்சந்த் இந்த மாதிரி ஏதாவது போடு , ஒரு மாசத்துல சிகரெட்ட துப்புரவா மறந்த பின்னாடி இதையும் உட்டுரு , ஏன்னா ஒரு மாச பழக்கத்தை ஈசியா உட்ருலாமில்ல " நல்ல யோசனையாக தோன்றியது . நம்புங்கள் நான் சிகரெட் பிடித்து ஒரு மாதம் ஆகிவிட்டது ஆனால் மாணிக்சந்த் போட்டதால் பல் கரையானது ,வாய் துர்நாற்றம் அடித்தது , அஜீரனகொலாறு கண்டது , அசிங்கமாக அங்கங்கே துப்பி அழுக்காக்கவேண்டியிருந்தது. குட்கா உட்கொள்வதால் உண்டாகும் தீமை சிகரெட் பிடிப்பதை விட இரண்டு மடங்கு அதிகம் என்று செய்தித்தாளில் பார்த்த மாத்திரத்தில் அதே டீக்கடையில் சிகரெட் <span id="TRN_100">வாங்கி </span> <span id="TRN_101">பற்ற</span> <span id="TRN_102">வைத்தேன்</span> . <span id="TRN_103">இப்போது </span> <span id="TRN_104">சிகரெட்டின்</span> ஒன்னு <span id="TRN_106">விட்ட</span> <span id="TRN_107">தங்கை</span> <span id="TRN_108">போல் </span> குட்கா வும் ஒட்டிக் கொண்டது<br /><br /> இவர் சரியான ஆள் , ஏனென்றால் இவர் சிகரெட் பிடித்து விட்டவர் . வேறு பழக்கங்களும் இல்லாதவர் . இவரிடம் கேட்டால் கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்குமென தோன்றவே , எதிர் வீட்டு கணேஷ் அண்ணாவை ஒரு டீக்கடையில் சிகரெட் பிடித்து கொண்டு சந்தித்தேன் .<br />"தம்பி , ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறீங்க "<br />" ஒரு பாக்கெட் இருக்குமுண்ணே "<br />"அட , போப்பா , இதுக்குத்தானா , நானெல்லாம் ஒரு நாளைக்கு மூணு பாக்கெட் அடிச்சவனப்பா "<br />நம்பிக்கை பிறந்தது ,ஆனாலும் மூணு பாக்கெட் பிடித்த மூஞ்சியாக அது தெரியவில்லை , எங்கேயோ இடறியது , உள்ளிருப்பவனை அடக்கி விட்டு தொடர்ந்தேன்<br />" எபபிடினே விட்டீங்க "<br />" ஒன் பைன் டே , ஜஸ்ட் விட்ருலாம்னு தோணிச்சு , விட்டுட்டேன் "<br />"புரியலையே "<br />"தம்பி , ஒரு நாள் கலையில எழுந்திரிச்சு , ரெண்டு செகண்ட் யோசிச்சேன் ,விட்ரலாம்ன்னு தோணித்து,விட்டுட்டேன் "<br />"அவ்வளவு தானா , நீங்க நிகோடின் பாடச் இல்ல நியூ லைப் மிட்டாய் இதெல்லாம் சாப்புடல "<br />"அதெல்லாம் கண்ட்ரோல் இல்லாதவனுக்கு தம்பி , நான் ஒரு முடிவு எடுத்தேன் , அப்பிடியே அத பாலோ பண்ணிகிட்டேன் "<br />சுற்றி சுற்றி மறுபடியும் அதே இடத்திற்கு வந்தேன் , என் கேள்விகள் பூமராங் போல் எனக்கே திருப்பி விடப்பட்டன . விட வேண்டும் விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது ஆனால் புகை மட்டும் என்னை விடுவதாயில்லை<br /> <br /> சின்னதாக ஆரம்பித்த ஆஜீரன கோளாறு கொஞ்சம் கொஞ்சமாய் விசுவரூபம் எடுத்தது , என்டோஸ்கோபி என்பது ஒரு வகையான ஸ்கேன் என்றுதான் நினைத்திருந்தேன் ,செய்த சேட்டைக் கெல்லாம் அது தான் ஆப்பு என்பது பின் வழியாக குழாயை விடும்போதுதான் தெரிந்தது . உணவுக்குழாயில் ஏதோ குளறுபடியாம் , அதற்கு கொலிடிஸ் என்று வழக்கம்போல் வாயில் நுழையாத பேர் ஒன்றை வைத்தார் டாக்டர் . "இன்னும் ஒரு சிகரெட் பிடிச்சாலும் , உங்களுக்கு உணவுக்குழாயில் கேன்சர் வர 100 % சான்ஸ் இருக்கு " அசரிரீ போல் ஒலித்துக்கொண்டே இருந்தது .பத்து நாள் மெடிக்கல் லீவ் போட்டு , பொண்டாட்டி பிள்ளையோடு பிரியாமல் இருந்தேன் , முதல் நான்கு நாட்கள் நரக வேதனை அனுபவித்தேன் , தொண்டை வறண்டு போன மாதிரி , கண்கள் சொருகுவது போல் , கைகள் நடுங்குவது போல் பல விதமான அறிகுறிகள் எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது நான் எம்மற்றப் பட்டதாய் , ஒரே ஒரு சிகரெட் பிடித்து விட்டு பின் திரும்பியே பார்க்க வேண்டாம் என்று என்னை சமாதானப் படுத்தியது , நான்காவது நாள் இன்னொருவன் புதிதாய் பிறந்து சொன்னான் , "நீ ஐந்தாவது நாளை நெருங்குகிறாய் நண்பா" என்று .பத்து நாள் முடிந்து வெளியே வந்தேன் ,ஒரு சுற்று பெருத்திருந்ததை உணர முடிந்தது , இப்போது நண்பர்கள் சிகரெட் பிடிக்கையில் கடலை கடிக்க பழகிக் கொண்டேன்<br /><br /> ஒரு வருடம் ,சுவடே இல்லை , ஒரு புல் ரம் அடித்தால் கூட , என்னை சிகரெட் பிடிக்க வைக்க முடியாது ,இதோ என் முன் அமர்ந்திருக்கிறானே ,அவன் என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு ஓல்ட் மன்க் ரம்மை ( அவன் செலவில் ) வயிற்றில் ஊற்றிக்கொண்டே சொன்னேன் <br /><span style="font-weight: bold; font-style: italic;">" ஒன் பைன் டே , ஜஸ்ட் விட்ருலாம்னு தோணிச்சு , விட்டுட்டேன் "</span> <span style="font-weight: bold; font-style: italic;"> "புரியலையே "</span><br /><span style="font-weight: bold; font-style: italic;"> "தம்பி , ஒரு நாள் கலையில எழுந்திரிச்சு , ரெண்டு செகண்ட் யோசிச்சேன் ,விட்ரலாம்ன்னு தோணித்து,விட்டுட்டேன் "</span>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-48001879398927871142011-01-24T01:08:00.000-08:002011-01-24T08:30:01.405-08:00எடுப்பார் கைப்பிள்ளை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3Vf40g_ut_kx40_oZp2rUIb-K_u71iLsNu2WZ6a3G5AajXcr2AptnVa2C5lF385wNmAOT_0QwOeXVx7Gc67v7Eff63YjWErxKeLAKVm8MTqL4QNy49efBV3_VdKSfDV25ijxYLpTP1oJj/s1600/66.gif"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 314px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3Vf40g_ut_kx40_oZp2rUIb-K_u71iLsNu2WZ6a3G5AajXcr2AptnVa2C5lF385wNmAOT_0QwOeXVx7Gc67v7Eff63YjWErxKeLAKVm8MTqL4QNy49efBV3_VdKSfDV25ijxYLpTP1oJj/s400/66.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5565677496929463522" border="0" /></a><br />அடங்கி நடக்க அம்மா சொன்னார்<br />பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று<br /><br />விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார்<br />பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது<br /><br />காதல் வந்த வேலையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம்<br />கவிதை கற்ற வேலையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது<br /><br />கம்பியூட்டர் படி என்றான் நண்பன்<br /> காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி<br /> காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர்<br /> கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி<br /> <br />வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது<br />நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-40027470322144190622011-01-11T23:58:00.000-08:002011-01-12T00:16:20.931-08:00சேல்ஸ் எக்ஸ்யகிடிவ்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghbyTaCjQUZ1o3wXpsXmH448M702f7zassFdJoZyE5NCOaeg-QGdMo6rJxAAjOmuOxSa3Sj287sArHSevGKAJs4HlJBpN6eIm-8YnT6kZDdrD9o2vhK7TMPyNv4bCAWgdA3XwCJZWYzB6R/s1600/salesman.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghbyTaCjQUZ1o3wXpsXmH448M702f7zassFdJoZyE5NCOaeg-QGdMo6rJxAAjOmuOxSa3Sj287sArHSevGKAJs4HlJBpN6eIm-8YnT6kZDdrD9o2vhK7TMPyNv4bCAWgdA3XwCJZWYzB6R/s400/salesman.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5561209653953625010" border="0" /></a><br /><span></span>சுமை<br /> கையிலிருக்கும் பையை விட<br /> நெஞ்சிலிருக்கும் சோகம்<br /><br />பொய்<br /> பொய் மட்டுமே உரைப்பேன் என்பது<br /> என் மீது சுமத்தப்படும் பச்சை பொய்<br /><br />அறிவிப்பு பலகை<br /> சோசலிசம்<br /> நாய்களுக்கும் எங்களுக்கும் ஒரே பலகை<br /><br />முரண்பாடு<br /> டாக்டர் மது அருந்துவது<br /> உற்சாகம் பெற என்றாய்<br /><br /> வக்கீல் புகை பிடித்தால்<br /> யோசிக்கிறார் என்றாய்<br /><br /> சாப்ட்வேர் யுவதி டான்ஸ் பார் செல்வது<br /> மன அழுத்தம் குறைக்க என்றாய்<br /><br /> இவற்றில் ஏதேனும் ஒன்றை நான் செய்தால்<br /> "சேல்ஸ்ல இருக்கான் " என்கிறாய்<br /><br />கேவலம்<br /><br /> அக்றிணை உடன் செய்யும் <span>உன் </span>புனிதமான வேலையை ஒப்பிட்டு<br /> பார்த்தால் - உயிருள்ள உன்னுடன் வியாபாரம் செய்யும் என் வேலை<br /><br /><br />தோல்வி<br /><br /> விற்ற பொருட்கள் சுமக்கும் வெற்றிப்பொய்யை<br /> தின்று களித்த சமுதாயத் தோல்விPARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-69564770062821264902011-01-05T02:14:00.001-08:002011-01-05T02:16:26.110-08:00சோறும் சோறு சார்ந்த இடமும் - மதுரை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiImszCJLzNaTw0JvNCIi5opdcyDfvomdlkYQTlEZ9EKtIfTQ-dz-ioigQdFURyxmIOsFZYKUJTqKM__jNmXNWOY0BsAKZ7IMtOEd8ivUK9Aqw1woEjk8WrDugNwe_wMhHf7D6DspK_ZA5k/s1600/madurai-tourism.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 269px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiImszCJLzNaTw0JvNCIi5opdcyDfvomdlkYQTlEZ9EKtIfTQ-dz-ioigQdFURyxmIOsFZYKUJTqKM__jNmXNWOY0BsAKZ7IMtOEd8ivUK9Aqw1woEjk8WrDugNwe_wMhHf7D6DspK_ZA5k/s400/madurai-tourism.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558643258692865682" border="0" /></a><br />மல்லிகை வாசம் மட்டுமல்ல , மண் வாசம் மட்டுமல்ல , மதுரை மசாலா வாசமும் மனதை தொடும் ஒன்று தான் . மதுரை யின் சிறப்பு என்ன வென்றால் நகரமும் அல்லாது கிராமும் அல்லாது ஒரு கலவையாக இருப்பதே . தூங்கா நகரம் என்பது ஒரு அக்மார்க் உண்மை , இருபத்தி நாலு மணி நேரமும் எல்லாமே கிடைக்கு நகரம் . மொத்தத்தில் தென் தமிழ்நாட்டின் வாணிப சந்தை மதுரை என கொள்ளலாம் .<br /><br /> முதலில் சைவம் , முருகன் இட்லி கடை , பூபோன்ற இட்லிகளும் ,நான்கிலிருந்து ஐந்து வகை சட்னிகளும் , கட்டியாகவும் இல்லாமல் ,சன்னமாகவும் இல்லாமல் இட்லி பதத்திற்கு சாம்பாரும் இந்த கடையின் சிறப்பு . இன்று சென்னையில் முருகன் இட்லி கடை கொடி கட்டி பறந்தாலும் , அதன் ஆணி வேர் இன்றும் மதுரையில் நிற்கக்கூட முடியாத தளவாய் சாலை சந்தில் உள்ளது . மதுரை மண் வாசம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த கடை ஒரு முக்கியமான இடம் .<br /><br /> ஹோட்டல் டெம்பிள் சிட்டி, இன்னொரு முக்கியமான கடை , மதுரையில் நான்கு இடத்தில் உள்ளது இந்த கடை . மதுரை மாட்டு தாவணி பஸ் நிலையத்திற்கு எதிரே கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் .நூறு வகை தோசை இங்கு பிரசித்தி பெற்றது .வகைகளை சாப்பிட்டு பார்க்கவே நமக்கு ஒரு வாரம் ஆகும் .<br />ஆர்யாஸ் , ஆனந்தா மற்றும் இன்னும் சில பல பவன்கள் இருந்தாலும் ,கண்டதை அரைத்து போட்டு சுவையை கூட்டும் வேலை இந்த உணவகத்தில் இல்லை ,எனவே தைரியமாக சாப்பிடலாம் .<br /><br /> சைவத்தை விட மதுரை அசைவத்திற்கு தான் பிரசித்தி என்று சொல்ல லாம் , ஐதராபாத் பிரியாணி , ஆம்பூர் பிரியாணி , திண்டுக்கல் பிரியாணி , சங்கரன்கோயில் பிரியாணி , காலிகட் பிரியாணி வரிசையில் மதுரை பிரியாணியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் , அந்த அளவிற்கு இன்று பிரியாணி கலை கட்டுகிறது மதுரையில் . என் கணக்கில் முதலிடம் வகிப்பது அம்மா மெஸ் தான் . மதிய சாப்பாட்டிற்கு அம்மா மெஸ் சென்று பாருங்கள் , மலைத்து நிர்ப்பீர்கள் , என்ன சாப்பிட , எது சாப்பிட என்று ஒரு பட்டி மன்றமே வைக்க வேண்டும் . ரெகுலர் மெனு வான சாப்பாடு , பிரியாணி தவிர , நண்டு ஆம்லேட் , கறி ஆம்லேட் , குடல் குழம்பு ,தலைக் கறி , காடை வறுவல் , முயல் சுக்கா என பறப்பது , நடப்பது , மிதப்பது அனைத்தையும் இங்கு காணலாம் . உண்மையான வெட்டு குத்து வேண்டுபவர்களுக்கு அம்மா மெஸ் தான் புகலிடம் . அப்படி என்ன வித்தியாசம் இங்கு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது , இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் மசாலாக்கள் கிராமத்து முறைப்படி அரைத்து வைத்து சமைக்கப்படுகிறது . அம்மா சமையல் என்பது அரைத்து வைப்பது தானே , சொல்லி புரிய வைக்க முடியாது , உண்டு பாருங்கள் ஒரு முறை அப்போது தெரியும் என் வாக்கு மெய்யா பொய்யா என்று .<br /><br /> கோனார் மெஸ் , இந்த கடை நிறைய பேர் கேள்வி பட்டு இருப்பீர்கள் , சில பல சினிமாக்களில் இந்த பெயர் உச்சரிக்க பட்டிருக்கும் . இங்கு தான் மதுரை புகழ் கறி தோசை கிடைக்கும் . அதென்ன கறி தோசை ? மட்டன் கறியை மைய சமைத்து அதை தோசை மாவுடன் சேர்த்து இடுவார்கள் , மாலை நேரம் கோனார் மெஸ் முன்பு திருவிழா கூட்டம் காணலாம் , எல்லாம் இந்த கறி தோசைக் காகத்தான் . இது தவிர புரோட்டா தலைக்கறி குடல் குழம்பு போன்றவையும் கோனார் மெஸ்ஸில் பிரபலம் தான் , அரசன் முதல் ஆண்டி வரை இந்த கோனார் மெஸ்ஸுக்கு க்கு அடிமையாகாத ஆள் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் .<br /><br /> அடுத்த படியாக குமார் மெஸ் , மேலே சொன்ன அனைத்து வகைகளும் இங்கும் கிடைக்கும் , இடம் கிடைக்காத பட்சத்தில் இங்கு வருவோம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து தான் போவீர்கள் , இங்கும் திருவிழா கூட்டம் தான் . இதில்லாமல் மதுரை முழுதும் கையேந்தி பவன்களை நாம் காணலாம் , எல்லா கடைகளிலும் நம்பி சாப்பிட இட்லி கிடைக்கும் , நல்ல சட்னி சாம்பார்கள் கிடைக்கும் , அம்மா மெஸ் , கோனார் மெஸ் ,குமார் மெஸ் அட்ரெஸ் தெரிந்து கொள்ளவது மிக மிக எளிது , மதுரையில் இருக்கும் சின்ன குழந்தைகள் கூட உங்களை வழி காட்டி அனுப்பி வைப்பார்கள்<br /><br /> நான் சாப்பிட்ட கடைகளிலேயே , அசைவ உணவின் அரசன் பட்டத்தை ஜெயராம் மெஸ்ஸி ற்கு அளிக்கலாம் , அப்படி ஒரு சுவை நான் வேறுங்கும் கண்டது மில்லை கேட்டது மில்லை , இந்த ஜெயராம் மெஸ் சீர்காழிக்கும் ,சிதம்பரத்திற்கும் இடையே ஓடும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குடிசை வீட்டில் நடத்தப் படுகிறது , அசைவ பிரியர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒரு இடம் , சிதம்பரம் சீர்காழி பக்கம் நிறைய முறை செல்ல வாய்ப்பு கிட்ட வில்லை , எதிகாலத்தில் வாய்ப்பு கிட்டும் பட்சத்தில் விரிவாக எழுதலாம்<br /> <br /><br /> இது கொஞ்சம் புதுசு , குடி மக்களுக்காக ஒரு ரகசியம் , எனவே மற்றவர்கள் ஜகா வாங்கி கொள்ளலாம் . அலுமினிய டம்ளர் கடைகள் கேள்விப் பட்ட துண்டா ? மதுரை யில் முக்கியமான ஒரு இடத்தில் உங்களுக்காக இருபத்தி நாலு மணி நேர சேவையில் சில உணவு விடுதிகள் உள்ளன . உள்ளே சென்று உங்களுக்கு தேவையான பிராண்டு என்ன என்று சொல்ல வேண்டியது , அதே பிராண்டு மிக்சிங் உடன் அலுமினிய டம்ளரில் வந்து நிற்கும் , நாலு ரவுண்டு அடித்து கொண்டே சாப்பிட்டு கொள்ளலாம் , இது நமக்குள்ளே இருக்க வேண்டிய விஷயம் , எந்த இடம் , எந்த கடை என்று சொல்லும் பட்சத்தில் , இந்த இருபத்தி நாலு மணி நேர சேவை யாருக்குமே இல்லாமல் போய் விடுமோ என்ற பயத்தில் இதோடு நிறுத்துகிறேன் , அவசர நேரத்தில் , இக்கட்டான சூழ்நிலையில் , வேறு வழியே இல்லாத பட்சத்தில் குடி மக்கள் எனது அலை பேசியில் அழைத்து கடை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்<br /><br />அடுத்த படியாக , நாம் பார்க்கப்போகும் இடம் பிரியாணிகளின் சொர்க்கம் - வாணியம்பாடி , ஆம்பூர்PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-66559022089596170852011-01-03T11:17:00.000-08:002011-01-03T11:22:01.308-08:00பயணம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi92p7cicV_SxBEdvShpmTY2bXOWRgP3JUgjjJhdzAuhomBG0-As5HIRepYF7-Sa7umsxPilT2aDsNsNPJ_CtE3z-hg6yxixvsbOYgm1iqm6cWoB2RsIXszFDrNmDyPwYTOKx8OdpH3wx8l/s1600/DSC01281.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi92p7cicV_SxBEdvShpmTY2bXOWRgP3JUgjjJhdzAuhomBG0-As5HIRepYF7-Sa7umsxPilT2aDsNsNPJ_CtE3z-hg6yxixvsbOYgm1iqm6cWoB2RsIXszFDrNmDyPwYTOKx8OdpH3wx8l/s400/DSC01281.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558041999121968562" border="0" /></a><br /><br />முன் இருக்கைகளையும் ,<br />ஜன்னல் வழி பிரபஞ்சத்தையும்<br />தவிர வேறேதும் காணா கண்கள்<br />பேருந்து பயணம்<br /><br />திறக்கும் என தெரிந்தும் கதவை மட்டுமே நோக்குவதும்<br />அழுத்தி ஓய்ந்த பின்னும் பொத்தான்களை நோக்குவதும்<br />லிப்ட் மீது ஒரு குறும் பயணம்<br /><br />எளியாரில் வலியார் தேடும்<br />பொது வகுப்பு ரயில் பயணம்<br /><br />குறட்டை வருமோ மானம் போகுமோ<br />தூக்கம் இழந்த விழிகளுடன்<br />விமானத்தில் ஒரு சொகுசு பயணம்<br /><br />குனித்து நிமிர்ந்து சரிந்து சாலையை அளவெடுக்க<br />திமிறி படரும் அவளின் அங்கங்களையும் அளவெடுக்க<br />இளமை மிளிரும் ஒரு பைக் பயணம்<br /><br />வலி மிகுந்த நேற்றைய பயணங்கள் தாம்<br />வலி குறைக்கும் இன்றைய சுவாரஸ்யங்கள்PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-25406017441766664262011-01-02T10:09:00.000-08:002011-01-02T10:13:48.634-08:00இதயம் கொள்ளை அடித்தவன்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrrbl-eE1HZhq1Fp29_xGVDwBgcURAg2s28jbk5tzHyDSHt8PPjoY4gfv_rYhQ6BDN3wKlTxGH13eqAeeIQFk8H_T8yOlGQHp8WCJFpMS90OW8QEyJ23-n6_L-L-xbcDNwcf-mS67usLgt/s1600/images.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 218px; height: 231px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrrbl-eE1HZhq1Fp29_xGVDwBgcURAg2s28jbk5tzHyDSHt8PPjoY4gfv_rYhQ6BDN3wKlTxGH13eqAeeIQFk8H_T8yOlGQHp8WCJFpMS90OW8QEyJ23-n6_L-L-xbcDNwcf-mS67usLgt/s400/images.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5557653070692555282" border="0" /></a><br />அவன் ஒரு அற்புதமானவன். பழகும் யாரையும் எளிதில் தன் பக்கம் இழுத்துவிடுவான் .அவனோடிருந்த மூன்று வருடங்களில் என் அடிப்படை கட்டு கோப்பை மாற்றி எழுதியவன் .அவன் பெயர் பார்த்திபன் . நான் ஐதராபாத் செல்ல வேண்டிய சூழ்நிலை , என் பல வருட வேலை தேடும் படலத்தின் முற்றுப்புள்ளி யாக எனக்கு வேலை அளித்த நிறுவனம் என்னை ஐதராபாத் செல்லும்படி பணித்தது . சென்னை தவிர வேறொன்றும் அறியாத நான் சற்று பயத்துடன் தான் கிளம்பினேன் , என்னை வழி யனுப்ப வந்த நண்பன் எனக்கு கொடுத்த ஒரே ஒரு ஆறுதல் வார்த்தை "பார்த்திபன் ".<br /><br /> நமக்கு இது தேவை என்று நினைக்கும் போதே அதோடு நிற்பான் அவன் , நேரங்கள் சொல்லும் இங்கிதங்கள் தெரிந்து நடந்துகொள்வான் . எப்படி தேடினாலும் அவன் மீது கோபம் வருவதற்கு எந்த காரணங்களும் கிடைக்காது . அறையில் இருக்கும் ஆறு பேருக்குமே அவனை பிடிக்கும் , சுவையான விஷயம் என்னவென்றால் அவன் விசயத்தில் எல்லோருமே விட்டு கொடுக்கும் போக்கை கடை பிடிப்போம் .அவனால் எனக்கு ஐதராபாத் பிடித்து போய்விட்டது .<br /><br /> அது ஒரு நல்ல நாள் , தசரா பண்டிகை , ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை பார்க்க ஆரம்பித்தோம் , ஒருவன் மட்டன் மற்றும் சமயல் பொருள் வாங்குவது , இன்னொருவன் "சரக்கு " வாங்குவது , இன்னொருவன் சை டிஷ் வாங்குவது ,இன்னொருவன் சமையல் செய்வதென்று . என்னுடைய அறையில் எல்லோருமே சமைப்போம் ,காரணம் பார்த்திபனுக்கு சமையல் செய்வதென்றால் உயிர் , சமைக்கும் போது அருகில் அழைத்து இப்படி செய்தால் இந்த சுவை வரும் ,அப்படி செய்தால் இந்த சுவை கூடும் என சொல்லி கொண்டே சமைப்பான் , அதை பார்க்கும் போதே நமக்கும் சமைக்கும் ஆர்வம் வந்து விடும் .ஆனால் பண்டிகை நாளன்று நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பார்த்திபனையே சமயல் செய்ய விட்டோம் .நல்ல குடி, நல்ல சாப்பாடு ,நல்ல தூக்கம் .<br /> இரவு மணி , பன்னிரண்டு இருக்கும் , முனகல் சத்தம் கேட்டு விழித்து பார்த்தேன் . பார்த்திபன் தான் முனகிக்கொண்டு இருந்தான் . என்ன என்று கெட்ட போது நெஞ்சு வலிப்பதாக கூறினான் .தசரா என்பதால் இரண்டு நாட்களுக்கு ஆஸ் பிடல்களுக்கு விடுமுறை , என்ன செய்வதென்று தெரியாமல் , ஒரு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்து தூங்க வைத்து விட்டேன் .காரணம் பார்த்திபனின் குணம்தான் . பார்த்திபனுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு ,தான் படிக்கும் அல்லது பார்க்கும் விஷயங்கள் தனக்கும் வந்ததாக உணர்வான் .அதை பற்றி நிறைய தெரிந்து கொள்வான் .நிறைய தெரிந்து கொள்வதே ஒரு வியாதி தான் என்னை பொறுத்தவரையில் . இதே போல் ஒரு முறை பன்றி காய்ச்சல் வந்தது போல் படுத்து கொண்டான் , ஒரு முறை கேன்சர் டெஸ்ட் எடுத்து வந்தான் , இப்போதும் ஏதேனும் ஒரு புத்தகத்தில் மாரடைப்பு பற்றி படித்திருப்பான் , அதனால் தான் அவனுக்கு நெஞ்சு வலி போன்ற பிரமை .<br /><br /> அடுத்த நாள் , நாலு நண்பர்களுடன் , நகரத்தில் நம்பர் ஒன் கார்டியாலஜிஸ்ட் அறையில் அமர்ந்திருந்தோம் . தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை விளக்கி சொல்லிகொண்டிருந்தான் . முதலில் லேசான வலி நெஞ்சில் ஆரம்பித்தது , பின் கை முழுது பரவியது ,அதன் பின் தாடை தலை என பொறுக்க முடியாத அளவிற்கு வலி கவ்வி பிடித்தது ,மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருந்தது ,எனது இதயம் துடிப்பது எனக்கே தெரிந்தது என்றெல்லாம் அவன் சொல்வதை கேட்கும் போதே எனக்கு மாரடைப்பு வரும் போல இருந்தது . கண்டிப்பாக அவன் இவை அனைத்தையும் இன்டர்நெட்டில் படித்திருப்பான் ,அதனால் தான் அவனுக்கு அத்தனை அறிகுறிகளும் தனக்கும் வந்து விட்டதாக நினைத்து சொல்லி கொண்டிருக்கிறான் .அனைத்தையும் கேட்ட டாக்டர் அவனுக்கு மிக முக்கியமான ஒரு அறிகுறியான வியர்வை இப்போது கூட வரவில்லை என்பதை சுட்டி காட்டினார் . சொல்லி முடிக்கும் முன்னர் அவனுக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது .உடனே இ சி ஜி , எ கோ டெஸ்ட் இரண்டையும் எடுத்து பார்த்த அவர் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை , இது வாய்வு தொல்லையாக இருக்கலாம் என்று கூறி , சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார் . மெடிக்கல் கடையில் ப்ரிஸ்க்ரிப்சனை கொடுத்தவுடன் வழக்கம் போல தேவையில்லாத வேலை பார்த்தான் . எதற்க்காக இந்த மாத்திரை சாப்பிடவேண்டும் என்பதுதான் அவன் கேட்ட கேள்வி .சில விசயங்களை நம்ப வேண்டும் , ஆராய கூடாது . மெண்டல் பேஷன்ட் சாப்பிடுற மாத்திரை என்று சொன்ன வுடன் அங்கிருந்த எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை . இவன் பயம் அந்த டாக்டருக்கு தெரிந்தே இந்த மாத்திரை கொடுத்திருக்கிறார் . <br /> தண்ணியடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பார்த்திபன் முழு நேர காமெடி பண்ணி கொண்டிருந்தான் , இது வரை மூன்று கார்டியாலஜிஸ்ட் பார்த்தாயிற்று , ஒருவர் வயசானவர் , கண் சரியாய் தெரிஞ்சிருக்காது , இ சி ஜி தப்பா பார்த்திருப்பார் என்றான் ,இன்னொருவர் படிச்சு பாஸ் பண்ணின மாதிரி தெரியலை என்றான் , இன்னொரு டாக்டரை சின்ன பையனா இருக்கான் என்றான் .சில நேரத்தில் எரிச்சலாக இருந்தாலும் ,பல தடவை அவனை ஊறுகாயாக ஆக்கி விடுவோம் .தும்மினால் மூக்கு கான்செர் , ஒண்ணுக்கு வந்தால் மூத்திர பை கான்செர் என்று ஓட்டிக்கொண்டு இருப்போம்<br /><br /> வேலை மாற்றம் ,மறுபடியும் சென்னை , வந்து மூன்று மாதம் ஆகிறது , போன வாரம் தான் செல் போனில் பிடித்தேன் பார்த்திபனை , எல்லாம் நல்ல படியாக போயிக்கொண்டிருந்தாலும் இந்த இதய பிரச்சினை தான் தீர்ந்தபாடில்லை .இம்முறை சற்று கோபம் வரவே மாரடைப்பு வந்தா உன் போல ஆறு மாசத்துக்கு யாரும் உசுரோட பேசிக்கிட்டு இருக்க மாட்டானுங்க என்று கடிந்து கொண்டேன் .பின் எனது நண்பர் இயற்கை மருத்துவரை லைனில் படித்து கான்பெரன்ஸ் காலில் பேச வைத்தேன் , அவரும் கதை கேட்டு விட்டு இது மன வியாதிதான் என்று சொல்லி சில சூரனங்களின் பெயரை சொல்லி வைத்தார் .இம்முறை பார்த்திபன் குரலில் கொஞ்சம் தெளிவு இருந்தது . நாளை போக இருந்த ஒரு இதய சிறப்பு மருத்தவரிடம் போகப் போவதில்லை என்று சொன்னான்<br /><br /> இப்போதுதான் கால் வந்தது , பார்த்திபன் இறந்து விட்டான் என்று தகவல் . அவனுக்கு இ சி ஜி யில் தெரியாத அளவிற்கு வித்தியாசமான மாரடைப்பு . ஒரு வேளை அவன் கடைசி முறை பார்க்க நினைத்த இதய சிறப்பு மருத்துவர் இதை கண்டு பிடித்திருக்கலாம் . அற்ப்புதமானவன் ,இன்றைய தலைமுறைக்கு உரிய ஈகோ , ஷோ ஆப் இல்லாத யாரையும் புரிந்து நடக்கிற அவன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் ,நானே அவனை கொன்று விட்டேனோ என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வர ஆரம்பிக்கிறது . என் நெஞ்சின் ஒரு மூலையில் ஒரு சின்ன வலி எட்டி பார்க்கிறதுPARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-1893357293830032872010-12-30T08:45:00.000-08:002010-12-30T08:54:27.003-08:00பெண்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiAtw-gVUH29CWDxVDDJi9ohtD8-o_Qcd1L3iWczbx9AYskluiUuzPxRtLk0hVnV8dZTQQUafqQuklJCYbIiAmHvINkKsHiCzykzcwRgn4U1qkIPlNmbMPOBKwTGOX31gFdlV1_ZN_phBi/s1600/bbbb.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5556518685466090450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 338px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiAtw-gVUH29CWDxVDDJi9ohtD8-o_Qcd1L3iWczbx9AYskluiUuzPxRtLk0hVnV8dZTQQUafqQuklJCYbIiAmHvINkKsHiCzykzcwRgn4U1qkIPlNmbMPOBKwTGOX31gFdlV1_ZN_phBi/s400/bbbb.bmp" border="0" /></a><br /><div>பெயர்க்காரணம் சொல்வது கடினம்<br />பெயரே ஆரணம் ஆகியபடியால்<br /><br />பிறவி ஊமை பேசமுடியாது<br />பெண் பேசுவாள்<br /><br />இடப்புறம் இருப்பாள் அல்லது<br />வலப்புறம் இருப்பாள்<br />இருபுலங்கள் இணைவதில்லை<br /><br />இவள் இன்னொருத்தி வாழ்க்கையை வாழ்பவள்<br />இன்னொருத்தி இவளை வாழ்பவள்<br /><br />முரண்பாடு - ஆயுதம் தாங்கிய<br />நிராயுதபாணி அவள்<br /><br />துரோகமும் காதலும் ஒரு சேர செய்வது<br />இவளுக்கு உரித்தான தனித்தன்மை<br /><br />அழகான குழப்பம் அல்லது<br />குழப்பம் அழகானது<br /><br />வள்ளுவனின் வார்த்தை<br />பெண் வழி சேறல்<br /><br />ப்ராய்டின் வாதம்<br />பெண் ஒரு இருட்டு கண்டம்<br /><br />ஐன்ஸ்டீனின் குழப்பம்<br />புரியாத புதிர்<br /><br />ஓஷோவின் தியானம்<br />போகப் பொருள்<br /><br />புகை பிடித்தல்<br />மது சுவைத்தல்<br />அவளின் இன்றைய போதை சிறியது<br /><br />சமையல் சுகம் <br />பதி பக்தி </div><div>ஆபரண தாகம் </div><div>முகஸ்துதி மயக்கம்<br />புடவை மோகம்<br />புறம் பேசுதல்<br />டி வி சீரியல்<br />அவளின் நேற்றைய போதை கொடியது<br /><br />ஏமாறாமல் ஏமாறுவாள் அல்லது<br />ஏமாற்றி ஏமாறுவாள் </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-38081802198940209152010-12-28T10:08:00.001-08:002010-12-28T10:11:16.824-08:00விட்டில் பூச்சி - 2<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi8O4an7GgZF_5eOreCjGEPG80ydojQBsN_3gTaWgPcHKGxH6iSP3oDKwQBQ_cFtcIJYsQjC5gxIqi5jWxDoSlcm_yth1q8fVapVC5arzgOfsctsYpa__oMvqvuFrJe2fbyQuf5C7fgvZE/s1600/27.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5555797288088800834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi8O4an7GgZF_5eOreCjGEPG80ydojQBsN_3gTaWgPcHKGxH6iSP3oDKwQBQ_cFtcIJYsQjC5gxIqi5jWxDoSlcm_yth1q8fVapVC5arzgOfsctsYpa__oMvqvuFrJe2fbyQuf5C7fgvZE/s400/27.JPG" border="0" /></a><br /><div>காதல் கண்ட பின் தான் உணர்ந்தேன்<br />சந்நியாசி தான் நல்ல சம்சாரி என்று<br /><br />புலியை கட்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டேன் -இனி<br />மாட்டை பூட்டுவது மடத்தனம்<br /><br />எத்துனை அபத்தம் - கிளியிடம்<br />பச்சை நிறத்தை மாற்ற சொல்லி<br />மன்றாடிக்கொண்டிருக்கிறேன்<br /><br />ஆந்தைக்கு இரவில் பார்வை உண்டு<br />ஏமாந்து போனேன்<br />இரவிலும் பார்வை உண்டு<br /><br />காதல் என்பது நெருப்புதான்<br />நான் எப்படி விட்டில் பூச்சி ஆனேன் </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-86822722023291303152010-12-26T13:33:00.000-08:002010-12-27T03:48:22.243-08:00பதிவரே - சற்று கவனியும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz78cN2FQtiHG32BR58hqd-yyLn8VNpV26bMKXJ9eEI0zhr4MmOUNXcf4WwSEb3gxVtwjfiBwgGu4tVehpY1M_ceSXpmS5UqFPVylqiZ943uc9n8d0X2fXBruvFpdSTgOEROMhJ7Eqd7sA/s1600/bfly5.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz78cN2FQtiHG32BR58hqd-yyLn8VNpV26bMKXJ9eEI0zhr4MmOUNXcf4WwSEb3gxVtwjfiBwgGu4tVehpY1M_ceSXpmS5UqFPVylqiZ943uc9n8d0X2fXBruvFpdSTgOEROMhJ7Eqd7sA/s400/bfly5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5555109761550812338" border="0" /></a><br />இதை சொல்லியே ஆகவேண்டும் , அடக்கி வைத்த மூத்திரம் பெய்கையில் நாற்றமெடுக்கும் ,ம்ஹும் , விந்தை மனிதன் என்னுடைய பல வருட நண்பன் தான் என்றாலும் , அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று ( நல்ல வரவேற்பு அளிக்கப்பட்ட ) என்னை இப்படி எழுத தூண்டிவிட்டுவிட்டது . <h3><a href="http://vinthaimanithan.blogspot.com/2010/12/blog-post_22.html" target="_blank"><span style="color: rgb(206, 12, 12);font-size:85%;" >பதிவர் பா.ராவும் ஒரு தோழியும்...</span></a><span style="font-size:85%;"> </span></h3> <p>எங்கிருந்து அய்யா இது வருகிறது , நீர் நூறு பதிவு போட்டுவிட்டதால் , நாலு நண்பர் வட்டாரம் வந்ததால் , மரியாதை நிமித்தமாக சில விசயங்களில் உங்களை கலந்து கொள்வதால் இப்படி எழுதுவதா . கவிஞர் என்றால் "அது " இரண்டு இருக்க வேண்டுமா , ஆறு கோடி பெரும் எழுத நினைக்கும் ஆர்வத்தை ரசியுங்கள் , முயற்சியை பாராட்டுங்கள் , கிண்டலடிக்காதீர் , நீரும் அப்படித்தான் ஆரம்பித்தீர் , கொஞ்சம் பழசை அசை போடும் .</p> <p>முதன் முதலில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது . அன்று எங்கள் பள்ளி சார்பாக யாராவது கவிதை வாசிக்க வருவார்களா என்று அழைத்தபோது என்னை அனுப்பினார் எனது கணக்கு வாத்தியார் . அன்று அவ்வளவு கேவலமாக நான் வாசித்த கவிதையை அவர்கள் புகழ்ந்தனர் , இன்றும் என் சொந்த ஊருக்கு அவர்கள் நிகழ்ச்சி தபால் அனுப்பிய வண்ணம் உள்ளனர் . அவர்களின் இந்த முயற்சியின் காரணம் ஊக்குவிப்பு மட்டுமே .<br /></p> <p>கண்ணன் என எனக்கொரு அண்ணா உண்டு , அவர் படிக்காதவர் , எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தார் ,அதற்கு காரணம் சுந்தரனார் பல்கலைகழகத்தை சேர்ந்த தமிழாசிரியர் .அவர் பல முறை உம் போல் சிலரின் விமர்சனத்துக்குள்ளானாலும் , அவர் எழுதிய "ஆலமரம் " என்ற கதை படிப்பவரின் கண்களை குளமாக்கிவிடும்,அந்த கதைக்காக அவர் தமிழக அரசு விருது வாங்கியுள்ளார் , நல்ல வேளை அவரை உங்களுக்கு தெரியாது<br /></p> <p>இன்னும் சிலர் இங்கு உள்ளனர் . எழுத்துக்கு தோரணம் கட்டுபவர்கள் . சொல்ல வேண்டியதை நேராக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்வதுதான் உங்கள் அகராதியில் பதிவர் அல்லது எழுத்தாளரா ?</p> <p>பக்கத்தில் இருப்பவன் எனக்கு இம்சையை கொடுக்கிறான் என்பதற்கு , ஜப்பானிய துருப்புகள் இந்தோனேசியாவில் நுழைந்த போது ஹாலந்து நாட்டினரின் மனநிலையை போல் இருந்தது என எழுதுகிறார் நண்பர் ஒருவர் . ஐய்யா ,நான் உம் எழுத்தை மிக விரும்பி படிக்கிறேன் , உவமைக்கு ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை , சாப்பிட்டாயா என்ற கேள்விக்கு , அமெரிக்க பிரதமர் ரஷ்யாவில் விருந்து சாப்பிட்டபோது அதில் விஷம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவருடைய ஐரிஸ் மெய்காப்பாலனை முதலில் சாப்பிட வைத்த போது எதிரில் உட்கார்ந்திருந்த மாட்ரிட் இளவரசர் சொன்னது போல எனக்கும் பசியில்லை என்று சொல்வது போல் உள்ளது . வெகு ஜனத்திற்கு புரியும்படி எழுதுங்கள் .<br /></p> <p> இதை பற்றி பேசும்போது , உனக்கு உலக அறிவு கம்மி , உனக்கு புரியல ,அதப்பத்தி எனக்கு என்ன , புரியறவங்க படிப்பாங்க என்று விதண்டாவாதம் பண்ணுபவர்கள் சிலர் . இப்ப என்ன புக் படிக்கிறீங்க ,என்ற கேள்விக்கு இன்று வரை எனக்கு கிடைத்த பதில என்ன வென்றால் , நான் அல்லது வெகு ஜன மக்களுக்கு அல்லது கூடவே இருக்கும் இன்னொரு பிரபல பதிவருக்கும் கூட தெரியாத புத்தகங்களின் பேர் சொல்வதே இவர்களுக்கு வேலையாகிபோயவிட்டது . </p> <p> ஈழ பிரச்சினையை பற்றி எழுதி கண்ணீர் விட வேண்டியது , சரி ,அதற்காக ஒரு பைசா செலவு செய்தாயா அல்லது அவர்களை நேரில் ஒரு முறை கண்டு ஆறுதல் செய்தாயா - பக்கம் பக்கமாக அவர்களை பற்றி எழுதி நீ நல்லவனாக காட்டிகொல்கிறாய் - இந்த நீ என்பது சில பல மக்களை குறிப்பது .உங்கள் போதைக்கு ஈழ தமிழர் ஊருகாயாகிவிட்டனர் </p> <h3 class="post-title entry-title"><a href="http://krpsenthil.blogspot.com/2010/12/blog-post_24.html">தலைவர்களும், தொண்டர்களும் அப்புறம் மக்களும்..கே ஆர் பி<br /></a></h3> இவர் கொஞ்சம் சிரத்தை எடுத்து சொல்லுகிறார் , இவர் சொல்கிறது போல , இன்னொரு விஷயம் அரசியல் , ஒரு குரூப்பு அமைத்து கொண்டு மாற்றி மாற்றி ஓட்டு குத்தி கொள்வது ,எனக்கு நீ போடு ,உனக்கு நான் போடுறேன் , நான் பதிவுலகம் வந்து முழுதாய் ஆறு மாதம் கூட ஆகவில்லை எனக்கே இது எரிச்சல் தருகிறதே ,இதில் என்ன இருக்கிறதென்று சில பல வருடங்களாக இப்படி செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை .<br /> ஒரு பதிவராக இருக்க இந்த இந்த குவாலிட்டி இருக்க வேண்டும் என்று நீங்களாக தீர்மானித்து கொள்வது , புதிதாக வருபவனை எள்ளி நகையாடுவது , ஒருவருக்கொருவர் நன்றாக சொம்படித்துக்கொள்வது,யாரை பார்த்தாலும் இந்த புத்தகம் படி என்ற அறிவுரை சொல்லுவது , எப்போ பார்த்தாலும் புரியாத ஒரு புத்தகத்தை படிப்பதாக கூறிக்கொள்வது , ஏன் இப்படி மக்கா , ஆதரியுங்கள் , கோணல் மாணலாக எழுது பவனுக்கு சொல்லிதாருங்கள் ,ஆறு கோடி பேர் எழுதினாலும் உங்கள் இடம் உங்களுக்கே ஐய்யா ! புலவரே !<br /><br />உங்களை புண் படுத்த அல்ல , செய்வதை கொஞ்சம் பக்குவமாக செய்யுங்கள் , நீங்கள் சொல்வதை நம்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது என்னை போல ,நல்ல திறமை உள்ள நீங்களே இப்படி செய்தால் எப்படி என்ற சின்ன கோபமே !PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-64066857905588224072010-12-23T05:29:00.001-08:002010-12-23T05:30:11.934-08:00சோறும் சோறு சார்ந்த இடமும் - கோவில்பட்டி வட்டாரம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIkpVJ6T0CiH5bjVCNMe4moB9UqTH5tMI-7McElxJ4FIwA3ZMcD63drFUdCSTnL9-eL1zcqjExYGKFxFSfNl1W-I2mOmJH-IFUhVUulGCzrxEg9ut5x-1FzAB457b6qx73Us3i8T1BsOoN/s1600/top_img1.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5553869429871533794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 254px; CURSOR: hand; HEIGHT: 76px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIkpVJ6T0CiH5bjVCNMe4moB9UqTH5tMI-7McElxJ4FIwA3ZMcD63drFUdCSTnL9-eL1zcqjExYGKFxFSfNl1W-I2mOmJH-IFUhVUulGCzrxEg9ut5x-1FzAB457b6qx73Us3i8T1BsOoN/s400/top_img1.gif" border="0" /></a><br /><div>கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை செல்லும் வழியில் வானரமுட்டி என்ற ஊர் உண்டு . அந்த ஊரிலிருந்து மூன்று மைல் தூரம் நடந்து சென்றால் வெயிலு கந்த புரம் என்ற ஊர் வரும் , இந்த ஊரில் தான் சமையல் கலையை கற்கும் ஆர்வம் எனக்கு வந்தது , என் அம்மா பிறந்த ஊர் அது , வெறும் மிளகாய் பொடியும் மஞ்சள் பொடியும் மட்டும் சேர்த்து நாட்டு கோழி குழம்பு வைப்பார்கள் என் பாட்டி , அந்த சுவை எந்த ஒரு மசாலா வை விடவும் மிஞ்சி விடும் அளவிற்கு இருக்கும் . சேர்க்க வேண்டியதை சேர்க்க வேண்டிய நேரத்தில் சேர்த்தால் நல்ல சுவை கிடைக்கும் என்பார் என் பாட்டி . என் அம்மா மட்டன் வறுவல் செய்தாலோ , குடல் குழம்பு வைத்தாலோ சுற்றி இருக்கும் பத்து வீட்டிலிருந்து டபரா கிண்ணி பறந்து வரும் . மட்டன் வறுவலை பொறுத்த வரியில் அதன் பச்சை வாசனையை நீக்கி , சம்பா வத்தலும் , தனியாவையும் , சீரகத்தையும் அதனுடன் கொஞ்சமாக வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது நல்லெண்ணையில் வதக்கி அம்மியிலிட்டு மைய அரைத்து ஏற்கனவே அரைத்த இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் மற்றும் பட்டை சோமபில் வதக்கி எடுத்த மட்டன் கலவையோடு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான மண மணக்கும் மட்டன் வறுவல் தயார் . இஞ்சி பூண்டு சீரகம் என மருத்துவ குணம் மிகுந்த பொருட்கள் கலக்கப்படுவதால் வயிற்றுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை .</div><br /><div><br />கோவில் பட்டி , அசைவ பிரியர்களுக்கு பெரியசாமி ஹோட்டல் ஒரு நல்ல உணவகம் . அனைத்து வகையான அசைவ உணவுகளும் நல்ல தரத்துடன் வழங்கப்படுகிறது . மாலை நேரம் புரோட்டா சாப்பிடும் அன்பர்களுக்கு ஏ 1 புரோட்டா கடை கண்டிப்பாக பிடிக்கும் , இங்கும் உங்களுக்கு முட்டையில் செய்யப்படும் கரண்டி ஆம்லேட் மற்றும் வழியல் போன்றவையும் கிடைக்கும் . கோவில் பட்டி<br />கடலை மிட்டாய் ஒரு அருமையான இனிப்பு , மொரு மொரு வென்று கடித்து மென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் ஒரு சுகம் வரும் பாருங்கள் ....எம் எல் ஆர் , இந்த கடையில் இந்த மொரு மொரு கடலை மிட்டாய் கிடைக்கும் . கோவில் பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் வழியில் வள்ளி மில் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெயரில்லாத கடை உண்டு . எப்போதும் கூட்டம் மொய்க்கும் அந்த கடையில் என்னதான் விற்கிறார்கள் என்று ஒரு முறை எட்டி பார்த்தேன் . உளுந்து வடை க்குதான் அத்தனை போட்டி , அப்படி ஒரு உளுந்து வடை நான் இது வரை சாப்பிட்டது இல்லை . நா வில் வைத்த மறு கணம் கரைந்து விடுவது போல , எண்ணை குறைவாக , உளுந்த வடிக்க உரிய மணத்துடன் , கொஞ்சம் குழைவாக ,கொஞ்சம் முறைப்பாக , அந்த தக்காளி சட்னியுடன் தொட்டு சாப்பிடும்போது என்ன ஒரு சுவை . பை பாஸ் பயண வாதிகளே , மறக்காமல் ஒரு முறை எட்டி பாருங்கள்<br /><br />சங்கரன் கோயில் பிரியாணி என்றால் ஓரளவு எல்லாருக்குமே தெரிந்தே இருக்கும் , சங்கரன் கோவிலுக்கு இப்படி ஒரு பெருமை கிடைத்தது சுல்தானியா பிரியாணி கடை யால் தான் . பதினொன்று மணியிலிருந்து ஒரு மணிக்குள் முடிந்து விடும் இங்கு பிரியாணி . உட்கார்ந்து சாப்பிடுவது கஷ்டம் அதனால் நிறைய பார்சல்கள் கட்டுவார்கள் . கூட்டம் அலை மோதும் .அப்படி என்ன இருக்கிறது ,இது என் நாவின் பதில் - இங்கு பயன்படுத்தப்படும் அரிசி சீராக சம்பா , பொதுவாக பிரியாணியில் நாம் பாசுமதி அரிசி தான் பயன்படுத்துவோம் இல்லையா , சீரக சம்பா வும் பிரியாணிக்கு மிக உகந்தது என்பது இங்கு சாப்பிட்ட பின் தான் அறிந்தேன் , இந்த கடையில் பயன்படுத்தப்படும் நெய் மற்றொரு காரணம் , இப்படி ஒரு மணம் கமழும் பிரியாணியை ஐதராபாத் பேரடைஸ் ஹோட்டலில் கூட கிடைக்காது . குற்றாலம் செல்லும் வழியில் நீங்கள் சங்கரன் கோயில் செல்ல நேர்ந்தால் இந்த கடையை மறக்காதீர்கள்<br /><br />குற்றாலம் என்ற உடன் அருவிகளுடன் இன்னொரு இடமும் ஞாபகம் வருகிறது . பார்டர் புரோட்டா கடை .குற்றாலம் அருகே செங்கோட்டை கேரளா பார்டரில் ரஹ்மத் புரோட்டா கடை இருக்கிறது , இதை எல்லோரும் பார்டர் கடை என்றுதான் அழைக்கின்றனர் . குற்றாலத்தில் ஒரு நல்ல ஹோட்டல் இல்லையே என்பவருக்கு பார்டர் கடை பற்றி தெரியாது என்று அர்த்தம் . விருதுநகர் எண்ணை புரோட்டா போல இருந்தாலும் இங்கு சுவை வித்தியாசப்படுகிறது . வறுத்த கோழி , வறுத்த காடை போன்றவை பிரசித்தம் , சீசன் நேரத்தில் கூட்டம் அலை மோதும் , குறைந்தது ஒரு முப்பது முறையாவது இங்கு சாப்பிட்டிருப்பேன் , ஆனாலும் திகட்டாத உணவகம்<br /><br />அடுத்து நம் அண்ணன் அஞ்சா நெஞ்சனின் கோட்டை , தலைநகர் மதுரை பற்றி அவர் சாப்பிட்டது போக உள்ள மிச்சத்தை அசை போடலாம் </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-66271156177855554012010-12-22T09:04:00.000-08:002010-12-22T09:12:10.174-08:00உலர் பூ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeMpuC7bah1TgKZ4Txx6QfonbtqXDtyLv3ilaFB2pM5asWsJL19o6e1_kRFPMWe3Zb4PUBjOg0ah5UCKDMemr6EVlrxF8YE3gE7yobOlHqB3OAp2ZjhoVU1TP8cMC6ShkSNEQUhDPUIw6v/s1600/article-1088342-028B2F8F000005DC-93_634x464.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5553554295729494226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 293px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeMpuC7bah1TgKZ4Txx6QfonbtqXDtyLv3ilaFB2pM5asWsJL19o6e1_kRFPMWe3Zb4PUBjOg0ah5UCKDMemr6EVlrxF8YE3gE7yobOlHqB3OAp2ZjhoVU1TP8cMC6ShkSNEQUhDPUIw6v/s400/article-1088342-028B2F8F000005DC-93_634x464.jpg" border="0" /></a><br /><div>அவள் ஊர் புகுந்தாள்<br />உருக்குலைத்தாள்<br />உதறி திரும்புகையில்<br />உலரும் பூக்களாய் நான் உயிர் அஞ்சலி செய்தேன்<br /></div><div><br />அவன் தியான வீரன்<br />திமிரும் கன்னி அலையின் மேல் ஏறும் விவேகன்<br />கற்பாறை மேல் அமரும் முன் அவன் </div><div>தோளில் தொற்றிய பூ மாலை நான்<br /></div><div><br />அவளும் அவனும் அமரர்கள்<br /></div><div><br />நான்<br /><br />அழகிய அலைப்பெண்ணின் வெள்ளை சிரிப்பு - அல்லது<br />ஆர்ப்பரிக்கும் கடலின் வெண் மகுடம் - அல்லது<br />நீ சொல்வது போல் கரை தொட்டு மரிக்கும் நுரை </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-57361551368900773862010-12-19T22:38:00.000-08:002010-12-19T22:43:35.019-08:00குட்டி மகிழ்ச்சி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQW5-cWzmxL9ofMyuzQnW1j1xgQ3w5Wt2sewSqNbaCbSFkZv2DjPfWNA-K6fQvGRNRT1rQmn1l6maxJ_ggfDTk5sxAmXMLKbr6SAAxa2c-SC0EvTufPzlehyphenhyphenBWtjKPk7exGqg3vXFZqxg_/s1600/Crazy-Images+%281%29.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5552651411715896162" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 272px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQW5-cWzmxL9ofMyuzQnW1j1xgQ3w5Wt2sewSqNbaCbSFkZv2DjPfWNA-K6fQvGRNRT1rQmn1l6maxJ_ggfDTk5sxAmXMLKbr6SAAxa2c-SC0EvTufPzlehyphenhyphenBWtjKPk7exGqg3vXFZqxg_/s400/Crazy-Images+%25281%2529.jpg" border="0" /></a><br /><div>கையில் காசில்லாத போது -தேடி சென்று<br />பிச்சைக்காரர்களை திட்டி அனுப்புவதில்<br />ஒரு குட்டி ஆறுதல்<br /><br />உச்சு கொட்டி ஓரமாக நடந்தாலும் -<br />ரத்தத்தில் குளித்த விபத்தான வண்டியை<br />எட்டி பார்க்கையில் ஒரு குட்டி திருப்தி<br /><br />கண்களில் கண்ணியத்தை காட்டியபோதிலும் -<br />அவள் கடந்து செல்கையில்<br />மறைத்ததை தேடுவது ஒரு குட்டி குதூகலம்<br /><br />தான் கண்ட உலக நாடுகள் பற்றி<br />மென்பொருள் நண்பன் பேசியபோது<br />அடுத்த ரிசஷன் எப்போது என்ற நினைப்பு<br />ஒரு குட்டி ஏக்கம்<br /><br />கற்பழிப்பு காட்சியை<br />கனத்த இதயத்துடன் பார்க்கும் போது<br />இம்முறையாவது "அது " நடக்குமா என்பது<br />ஒரு குட்டி குரூரம் </div><br /><div><br />மனம் குமுறி அழுதபோது -<br />நாளை இன்னொருவனும் என் போல்<br />அழுவான் என்ற எண்ணம்<br />ஒரு குட்டி மகிழ்ச்சி </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-74835182250720797612010-12-15T14:59:00.000-08:002010-12-15T15:17:21.213-08:00நிற்க<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDaVZ86VIPoEnQ3BOADPN6a_prdv4PxWo7H6Gu4t0okHxJ-lxfOUJl1myErYNxn6oRo5VjGuuOf6MtX1DjCvmAxhN2IcCPKZud_fM3q12-jmb-TXHYLlHBgRmbDoN_o4kMlugQg9LNOMrZ/s1600/Blue%20Suede%20Shoes1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5551050144194055202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDaVZ86VIPoEnQ3BOADPN6a_prdv4PxWo7H6Gu4t0okHxJ-lxfOUJl1myErYNxn6oRo5VjGuuOf6MtX1DjCvmAxhN2IcCPKZud_fM3q12-jmb-TXHYLlHBgRmbDoN_o4kMlugQg9LNOMrZ/s400/Blue%252520Suede%252520Shoes1.jpg" border="0" /></a><br /><div></div><br /><p></p><br /><p>காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே - நிற்க </p><p> முதலில் இருந்தே வராது காசில்லாத பட்சத்தில் </p><br /><p></p><br /><p>எத்தனை பேர் தொட்ட முலைஎத்தனை பேர் நட்ட குழி - நிற்க </p><p><span class=""></span> விபத்து நேர்ந்துவிடுவதால் இனி சாலைகளில் செல்லாதீர் </p><br /><p></p><br /><p>பெண் மனதை புரிந்தவர் ஒருவரும் இல்லை -நிற்க </p><p> நேற்றுவரை வாலாட்டிய தெருநாய் இன்று விரட்டி விரட்டி கடிக்கிறது </p><br /><p></p><br /><p>ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் -நிற்க</p><p><span class=""></span> உண்மைதான் வெற்றிக்கு பின் தான் இருக்கிறாள் முன் அல்ல </p><br /><p></p>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-45169047945854482752010-12-12T09:52:00.000-08:002010-12-12T12:35:34.834-08:00முகமூடி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJbpvlHoJ_ARBtPITyz_1Zrtpml8Y1VN9U4o3G7oItUiKu6gESzupL6j1TcLiInD69n-0VMsLbq86O_dxLbz2ce9dOKhyphenhyphenEic-pwWo2CBywkbQpnLFiGw_LSHOD0ju-2qFJaoTeOO616WXm/s1600/blank-male-mask.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5549857196525466050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 319px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJbpvlHoJ_ARBtPITyz_1Zrtpml8Y1VN9U4o3G7oItUiKu6gESzupL6j1TcLiInD69n-0VMsLbq86O_dxLbz2ce9dOKhyphenhyphenEic-pwWo2CBywkbQpnLFiGw_LSHOD0ju-2qFJaoTeOO616WXm/s400/blank-male-mask.jpg" border="0" /></a><br /><div>கொப்புளித்த கோபம்<br />குளமான விழி<br />கூறாத வாய்<br />அழகான மனைவி<br />அன்பான குடும்பம்<br /><br />சுடும் துரோகம்<br />நடுங்கும் கரங்கள்<br />உடுக்கை இழந்தவன்<br />உயிர் நண்பன்<br /><br />தேய்ந்தது கால் செருப்பு<br />அழிந்தது கை ரேகை<br />வராக் கடன்<br /><span class=""></span>வெள்ளை சிரிப்பு </div><div>நல்ல வியாபாரி </div><br /><div></div><br /><div><br />அழுகை குரல்கள்<br />ஆறுதல் வார்த்தைகள்<br />சோக வெள்ளம்<br />" எவனுக்கு வாய்க்குதோ " உள்ளே<br />"நல்ல மனுஷன் ஹும் " வெளியே<br /><br />ததும்பும் பாசம்<br />பசுவை தேடும் கன்று<br />அடங்கு மகனே அடங்கு<br />மாமியார் - மறு தாய்<br /><span class=""></span></div><div>நாடக மேடையில் நிஜம் நடிப்பு </div><div>நடித்து வெற்றியை ஜெயிக்கிறோம்<br />ஆனால் வெற்றி தோற்றது<br /><br />பொய் என்பது பொய்<br />உண்மை என்பது பச்சை பொய் </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-37915840014586082572010-12-12T07:35:00.000-08:002010-12-12T09:29:20.459-08:00சோறும் - சோறு சார்ந்த இடமும் - திருநெல்வேலி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifVfdpJgg51PS-7R6uko1pngeOMA9LYHYR54RSfsZ8R0lOUVGTriN0rkGtzmtrYnWoY2mBuOoS7dU6u_QO1oS5AXvfZfjaKK6sWQp7j-XhRvOaLcVysWAEbWSnMmhSa_gnYCED7Jrhy0Xo/s1600/3724557043_976aa676d1_z.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5549821438543560546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifVfdpJgg51PS-7R6uko1pngeOMA9LYHYR54RSfsZ8R0lOUVGTriN0rkGtzmtrYnWoY2mBuOoS7dU6u_QO1oS5AXvfZfjaKK6sWQp7j-XhRvOaLcVysWAEbWSnMmhSa_gnYCED7Jrhy0Xo/s400/3724557043_976aa676d1_z.jpg" border="0" /></a><br /><div>திருநெல்வேலி என்றாலே எனக்கு கண் முன் வருவது தாமிரபரணி ஆறும் , செம்மண் நிலமும் தான் . திருநெல்வேலி என்றால் நமக்கு ஞாபகம் வருவது அல்வா தான் இல்லையா. எனவே நாம் அல்வா விலிருந்து ஆரம்பிப்போம் . </div><div><br />இருட்டுக்கடை அல்வா , எப்படி செய்கிறார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர், ஆனால் சுவை , நாவில் எச்சில் சுரக்க வைக்கும் சுவை , இன்னொரு விஷயம் சாதாரணமாக அல்வா வினால் ஏற்படும் அஜீரண பிரச்சினை இங்கு எட்டி கூட பார்ப்பதில்லை . இருட்டுக்கடை அல்லாது இன்னொரு கடையும் உண்டு , சாந்தி சுவீட்ஸ் , ரயில்வே ஜங்சன் அருகே உள்ள பல சில சாந்திகளுக்கிடையில் ஒரிஜினல் சாந்தியை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான் , ஆனால் கூட்டம் மொய்க்கும் கொஞ்சம் பழைய கடையாக தட்டுப்படும் சாந்தி கண்டிப்பாக உங்கள் கண்ணில் படத்தான் செய்யும் . இருட்டு கடைக்கு நிகரனான அல்லது ஒரு படி சுவை அதிகமான அல்வா சாந்தி சுவீட்ஸ் சிலும் கிடைக்கும் . கூட்டம் மற்றும் காத்திருப்பது இங்கும் ஒரு பிரச்சினைதான் , ரயில் நிலையம் அருகில் இருப்பது பிரயாணிகளுக்கு சவுகரியம் , கால் கிலோ பொட்டலங்களாக கிடைக்கும் இவற்றை வாங்கி கொண்டு எப்படியும் ரயிலை பிடித்து விடலாம்<br /><br />மதிய வேளை , சைவ சாப்பாட்டிற்கு மண்பானை சாதம் கடை மிகச்சிறந்த இடம் . ஒரு குடிசை , அதனுள் நீளவாக்கில் இரண்டு டேபிள்கள் , பத்து இருக்கைகள் , பரிமாற இரண்டு மூதாட்டிகள் , கல்லாவில் உட்காராமல் ஊர்கதை பேசி சுற்றிகொண்டிருக்கும் முதலாளி . அசைவ பிரியனான நான் விரும்பி சைவம் சாப்பிடும் கடை இது . காரணம் செய்முறை தான் . கடையின் பெயருக்கு ஏற்ப இங்குஉணவுகள் மன்பானையிலேயே சமைக்கப்படுக்றது , வாழை இலையில் மண் பானை சோற்றுடன் ஒரு மனம் வரும் பாருங்கள் , சொல்லி மாளாது , இந்த சுவைக்கு ஈடு இணை கிடையாது . எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறுக்கு ஒரு பிரச்சினை வராது . கூடுதலாக நாம் வாங்கிகொல்வதற்க்காக வாழைப்பூ பொரியல் , அகத்தி கீரை பொரியல் , பாகற்காய் பொரியல் போன்றவை ஐந்து ரூபாய் வீதம் கிடைக்கும் . ருசிக்கு நான் கியாரண்டீ . விருந்தோம்பல் என்பதன் அர்த்தம் நமக்கு அறியச்செய்யும் ஒரு மண் வாசனை கடை . வண்ணாரப்பேட்டை பை பாஸ் சாலை ஓரத்தில் இந்த குடிசையை பார்க்கலாம் , கொஞ்சம் கூட்டம்தான் , பக்கத்திலேயே ஒரு டூபிளிகட் கடை கூட உண்டு ஜாக்கிரதை </div><div><br />அடுத்ததாக முத்து மெஸ் , இந்த முத்து மெஸ்ஸின் முதலாளி வள்ளலாரை கடவுளாக பாவிக்கும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர் . ஜன்க்சன் லிருந்து டவுன் செல்லும் வழியில் ஸ்ரீ புரம் என்ற இடத்தில உள்ள சைவ மெஸ் . இங்கு விசேசம் என்ன வென்றால் பரிமாறுபவர்களின் நடை உடை பாவனை உங்களை வடலூர் சத்திய தர்ம சாலைக்கு அழைத்து செல்லும் . இங்கு உணவு இயற்கை யான , ரசாயன கலப்பு ( பிளேவர் ) இல்லாத வகையில் சமைக்கப்படுகிறது, வயிறும் மனமும் நிறைந்து திரும்பலாம் , இன்னொரு விசேசம் என்ன வென்றால் , ஆறு நாட்களும் ஆறு வகை பத்திய ( டயட் ) சாப்பாடு . புதன்கிழமைகளில் இங்கு உளுந்து சாதம் என்பது கட்டாய சாப்பாடு . இந்த உளுந்து சாப்பாடென்பது பண்டை தமிழர்களின் கலாச்சாரம் , கலியாணம் செய்துகொள்ளும் மன மக்களுக்கு உளுந்து சாதம் வழங்கு வது ஒரு பழக்கமாகவே இருந்து வந்துள்ளதாம் , அதில்லாமல் உளுந்து சாதம் சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜை , சவ்வு ( லிகமண்டு ) போன்றவை வலுப்படும் , முதுகு , இடுப்பு வலிகள் தீருமாம் . அந்த பழைய ரெசிபி இவர்களிடம் நீங்கள் காணலாம் . சாப்பாடு முடித்த வுடன் ஒரு இனிப்பு தருவார்கள் , இதிலும் எந்த வொரு பிலேவரும் கலக்கப்படாமல் இயற்கையாகவும் , சுவையாகவும் கிடைக்கும்<br /><br />செம்மீன் , இது மட்டும்தான் திருநெல்வேலி யில் இருந்த நல்ல அசைவ ஹோட்டல் , நமது துர் அதிர்ஷ்டம் அந்த ஹோட்டல் மூடப்பட்டு விட்டது , இப்போதைக்கு நம்பி சாப்பிட " ஹோட்டல் வைர மாலை " பரவாயில்லை . இதில்லாமல் சாயந்தர வேளைகளில் ஆங்காங்கே கிடைக்கும் பொடி வடைகள் நல்ல ருசி .<br />அடுத்த பதிவில் நாம் கோவில்பட்டி சுற்று வட்டாரம் பார்க்கலாம் </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-50955714009298171942010-12-11T00:55:00.000-08:002010-12-11T01:01:37.953-08:00நானே ராஜா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSkZ0GXqx09_nz1algej-oaGELI7AHwUmpzudXb2xdbNzJbb_k_-Y9d6jyGFgzBIt7-pCEJ7LsJcqxqjEzrPzve9OsvYi0eTIa4nMPcMpNmppSkBkpMC690K3WAH01XkpqI93pI0maxG_3/s1600/hand_pointing.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5549345960307496322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 395px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSkZ0GXqx09_nz1algej-oaGELI7AHwUmpzudXb2xdbNzJbb_k_-Y9d6jyGFgzBIt7-pCEJ7LsJcqxqjEzrPzve9OsvYi0eTIa4nMPcMpNmppSkBkpMC690K3WAH01XkpqI93pI0maxG_3/s400/hand_pointing.jpg" border="0" /></a><br /><div><span class="">நீ யார் என்னை ஆள<br />நானே ராஜா நானே ,<br /><br />நான் நடக்குமிடத்தில் முள் இருந்தால்<br />உன் கைகளை என் பாதங்களாக்கு,<br />உன் குருதி காண நடப்பேன் முள் மேல் மீண்டுமொருமுறை<br /><span class=""></span></span></div><div><span class=""><span class=""> நான்</span> சிரிக்கையில் நீ சிரிக்கவேண்டும்<br />நீ அழுவாய் நான் அழ நேர்ந்தால்<br /><br />நான் உண்ணும் உணவை சாக்கடையில் எறிவேன்<br />நீ உண்ணும் உணவில் மல ஜலம் இடுவேன்<br /><br /><span class="">நான் உறங்கும் நேரத்தை இரவு என்று அழை ,<br /> விழித்த நேரத்தை பகல் என்று கூறு </span></span></div><span class=""><span class=""></span><div><br />நான் ஆடைகளை துறப்பவன்<br />நிர்வாணத்தை ரசிப்பவன்<br /><br />நான் உன் மேய்ப்பன்<br />நீ என் அடிமை<br /><br />என்னை என்னவென்று அழைப்பாய்<br />கொடூரன் என்றா , கோமாளி என்றா<br />அரக்கன் என்றா , அயோக்யன் என்றா </div><div><br />அதற்க்கெல்லாம் உனக்கு வாய்ப்பு இல்லை<br /><span class=""></span></div><div>அப்படி அழைக்க கொஞ்சம் வயது வேண்டும்<br />அந்தோ பரிதாபம் .......<br />இப்போதைக்கு<br /><br />" குழந்தை " என்று அழைத்துக்கொள் </span></div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-70690749938439841852010-12-09T03:56:00.000-08:002010-12-09T04:05:08.061-08:00சோறும் - சோறு சார்ந்த இடமும் - சாத்தூர்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOxxu0IuCD3uIzwI7-R7RcQvMylKIumQwbl1KQWTZOhldT67aJajcKRZPl47RWcmLuwF6Tn-3NYukD4P4mwoUiqV0onRx3jgV3VncFzlrqREDRjwDGt-hMXo_pfSKPV8BAbPHRm03kpTzP/s1600/untitled.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5548651069028931746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOxxu0IuCD3uIzwI7-R7RcQvMylKIumQwbl1KQWTZOhldT67aJajcKRZPl47RWcmLuwF6Tn-3NYukD4P4mwoUiqV0onRx3jgV3VncFzlrqREDRjwDGt-hMXo_pfSKPV8BAbPHRm03kpTzP/s400/untitled.bmp" border="0" /></a><br /><div>நான் வேலை செய்த முதல் நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத்தேர்வு நடந்த போது " நீங்கள் மனம் விரும்பி , உங்களையே மறக்கும் அளவிற்கு எந்த வேலையில் ஈடுபடுவீர்கள் " என்ற கேள்விக்கு ,நான் உடனே சொல்லிய பதில் " சமைப்பதும் , சாப்பிடுவதும் "<br />நான் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்பவன் , செல்லும் ஊர்களில் எது நல்ல ஹோட்டல் , எங்கு வயிறுக்கு பிரச்சினை வராது , எங்கு மண்வாசனையுடன் மணக்க மணக்க சாப்பிடலாம் என்று தெரிந்து வைத்துகொண்டு வெட்டு குத்தில் இறங்குவது வழக்கம்<br /><br />சாத்தூர் :<br /><br />நான் ஒன்பது முதல் பன்னிரண்டு வரை படித்த ஊர் . தினமும் கிடைக்கும் பைக்காசை சேர்த்து வைத்து கிரகம் ஹோட்டலில் புரோட்டா சாப்பிடுவது வழக்கம் . இன்று கிரகம் ஹோட்டல் சொல்லும்படி இல்லை என்றாலும் , சாத்தூரை பொறுத்த மட்டில் அசைவத்திற்கு நாடார் மெஸ் , சைவத்திற்கு தேவி விலாஸ் தான் . பிள்ளையார் கோவில் தெருவில் பழைய காலத்து வீடு ஒன்றில் தான் நாடார் மெஸ் நடத்தப்படுகிறது , இங்கு சாப்பாட்டுடன் ,ஒரு மட்டன் சுக்கா வாங்கி பிசைந்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே தெரியாத அளவு சாப்பிட ஆரம்பித்து விடுவோம் . பொதுவாக சாயந்தர வேளைகளில் தேன் மாவட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு புரோட்டா தான் .சாத்தூர் பை பாஸ் சாலையில் செட்டியார் கடை என்று கேட்டால் , ஒரு வெட்ட வெளி சாலையோர கடையை காட்டுவார்கள் .இங்கு புரோட்டாவிற்கு சைவ குழம்புதான் என்றாலும் , சுவையாக இருக்கும் . தமிழ் நாட்டில் முதன் முதலில் கரண்டி ஆம்லேட் கண்டுபிடித்தது இந்த கடைதான் . சுற்றிலும் மொரு மொறுப்பாக , உள்ளே கொஞ்சம் குழைவாக , காரம் உப்பு அளவாக சேர்த்து , தாளிக்கும் கரண்டியில் சுட்டு தருவார்கள் . இங்கு வரும் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு கரண்டியாவது சாப்பிடுவார்கள் . கொஞ்சம் கூட்டம் அலைமோதினாலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது .<br />சாத்தூருக்கு பெருமை சேர்க்கும் இன்னொன்று சேவு , இதில் இரண்டு வகை உண்டு நடப்பு சேவு , நயம் சேவு . இரண்டுமே நன்றாக இருந்தாலும் உள்ளூர் காரர்களுக்கு நடப்பு செவென்றால் தான் இஷ்டம் .<br />உலக அளவில் பிரசித்தி பெற்றது சாத்தூர் வெள்ளரிக்கா , எந்த சீசனிலும் இங்கு வெள்ளரி பிஞ்சு கிடைக்கும் . பல வெளி நாடுகளில் இன்று பயன்படுத்தும் வெள்ளரிக்காய் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது தான் .<br /><br />மதுரையில் இருந்து திருநெல் வேலி செல்லும் வழியில் விருதுநகருக்கு அடுத்து சாத்தூரை பார்க்கலாம் . சாத்தூர் வழி செல்லும்போது வெள்ளரிக்காய் , கரண்டி ஓம்லெட் , நடப்பு சேவு வாங்க மறக்காதீர்கள்<br />அடுத்த பாகத்தில் திருநெல்வேலி பற்றி பார்க்கலாம் </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-26316237102346367402010-12-01T21:42:00.000-08:002010-12-01T22:39:45.101-08:00"கடக்கர அண்ணாச்சி "<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoUKm6aJxCC-zaf1JEI44i7b-pV-rGR7Uked51s-1g4PKQ-Ehqh8DvDUUE3BCmvfYO-DRDbKrjsrCV69XTKXYFVQqKJHdI8_mVS-INzAiwN0TmK1aD706Ti1Oxg5CpLea-0wKY8wKTCZKB/s1600/picmain.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5545958752516382994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 260px; CURSOR: hand; HEIGHT: 350px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoUKm6aJxCC-zaf1JEI44i7b-pV-rGR7Uked51s-1g4PKQ-Ehqh8DvDUUE3BCmvfYO-DRDbKrjsrCV69XTKXYFVQqKJHdI8_mVS-INzAiwN0TmK1aD706Ti1Oxg5CpLea-0wKY8wKTCZKB/s400/picmain.jpg" border="0" /></a><br /><div>"கடக்கர அண்ணாச்சி " அப்படித்தான் கூப்பிடுவாங்க அவரை . அது 1992 , கடற்கரை சண்முகம் என்பது அவரோட பெயர் . வழுக்கை தலை , அஞ்சரை அடி உயரம் , வெள்ளை வேட்டி சட்டை ,கெடா மீசை,கோல்ட் பிளேட் கைக்கடிகாரம் ,மொத்தத்துல பழைய தமிழ் திரைப்பட நடிகர் செந்தாமரையை மாதிரியே இருப்பாரு .<br /><br />நெஞ்சுல இருக்குற தங்க செயின் தெரியுறமாதிரி ரெண்டு பட்டன சட்டையில கலட்டிவுட்டு தான் இருப்பார் . அவர பாத்து போலீஸ் காரங்க பயப்படனும் ன்னு தான் அப்படி சண்டியரு மாதிரி அலைவாராம் .<br />கடற்கரை ன்ற பேறுக்கு ஒரு காரணம் உண்டு . எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில , விடுதலை புலிகளுக்கு உதவி செய்யுறதுக்கு ஒரு சமூகம் வேலை செய்து கொண்டிருந்ததாம் , பழைய ஆர் எக்ஸ் 100 யாமஹா பைக்கின் என்ஜின் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் , துப்பாக்கி இதெல்லாம் கடற்க்கரை மணலில் கரையோரம் பொதெச்சி வைப்பாங்களாம் , விடுதலைப்புலிகளுக்கு இந்த அடையாளம் நன்றாக தெரியுமாம் , இரவு நேரங்களில் அவங்க அதை எடுத்துட்டு போயிருவாங்களாம் . சண்முகம் அண்ணாச்சி அந்த புதைக்கும் கூட்டத்தில் மிக முக்கியமானவராம் . எங்கே எதை வைப்பது , அதில் புலிகளுக்கு மட்டுமே தெரிந்த அடையாளங்களை வைக்கிறது இதெல்லாம் அவருக்கு அத்து படியாம் . அதனாலேயே அவருக்கு கடக்கர சண்முகம்னு பெயர் வந்ததாம் .இதெல்லாம் நான் பள்ளிகூடத்தில் படிச்சிகிட்டு இருக்கும்போது போது என் சித்தப்பா சொல்லுவாரு .<br /><br />எங்க ஊரில் ஏலக்காரர் கடை இட்லி சாப்பிட கடக்கர அண்ணாச்சி வருவாப்ல . இட்லியும் குடல் கொழம்பும் வாங்கிகிட்டு 4 அவிச்ச முட்டையும் சேர்த்து ஒரு விளாசு விளாசுவார் , அதை பார்க்கும் யாருக்கும் நாக்கில் எச்சில் ஊரும் . ' எலே , இந்த சுகத்துக்குதானே டே மனுஷன் நாயா அலையுறான்,இந்த சோறு நம்மாளுக எல்லாத்துக்கும் கெடைக்கனும்டே " என்று சொல்வார் . அகதி மக்களுக்காக வேதனை படுற ஆளு சாப்பாட்டு விசயத்துல மட்டும் ஏன் இப்படின்னு நெனைக்காதீங்க , எங்க எல்லாருக்குமே தெரியும் அவர் எதனால அப்படி சாப்புடுராருன்னு . அவரு கூட எப்பயுமே ஒரு நாலு சின்ன வயசு பசங்க வருவாங்க , ஒவ்வொரு தடவையும் வேற வேற பசங்க , வேற மாதிரி தமிழ் பேசிகிட்டு , பழைய துணிகள போட்டுக்கிட்டு, பூபோட்ட மினுமினுக்கிற லுங்கி கட்டி , பரட்ட தலையோட , சின்ன பயம் தெரியிற கண்களோட இருப்பாங்க அந்த பசங்க .<br />முகாம்ல நம்ம சொந்த பந்தம் , சகோதரர் எல்லாம் ஒரு வேலை சாப்புட்டு வாழும்போது ,நமக்கெதுக்கு நல்ல சாப்பாடு ன்னு நெனைச்சு அந்த பசங்க சரியா சாப்பிட மாட்டாங்களாம் , அவங்கள நல்லா சாப்பிட வைக்கணும் அப்படீன்னு இவரு அவங்க முன்னாடி இப்படி சாப்புடுவாராம் . ஏதேதோ பேசி அவங்கள நல்லா சாப்பிட வச்சிட்டு " ரோசக்கார பயக, இவங்க இப்பிடி சாப்புடரத பாத்துகிட்டே செத்து போயிரனும்டே,அத விட நல்லா சாவு கெடைக்குமா டே " என்று அவர் சொல்லும்போது கண் கலங்கி நா தழுதழுக்கும். இதை பார்க்கும் கிராம மக்கள் எல்லோருடைய மனசிலும் திடீரென்று ஒரு சோகம் அப்பிகொள்ளும் .<br />ஆரம்பத்துல அவரு புலிகளோட வச்சிருந்த தொடர்பு போக போக குறைய ஆரம்பிச்சது ,அதுக்கு நெறைய காரணம் இருந்துச்சு ,இந்திய அரசியல் நிலவரமும் ,புலிகளுக்கு இருந்த தடை கடுமயாக்குனுதும் ஒரு காரணம்தான் , ஆனா கடக்கர அண்ணாச்சி ,"போர்ல அவங்களுக்கு உதவி செய்ய இளவட்டங்க இருக்கானுக , பொழைக்க வந்த இந்த புள்ளைகளுக்கு தான் யாருமில்ல டே" ன்னு சொல்லுவார் . நெறைய கிராமங்களுக்கு போயி மக்களோட மக்களா நின்னு அவங்க மனசுல ஈழ மக்களை பத்தி பேசி , "அவங்க நம்ம ஆளுங்க டே , நாம தாண்டே அவங்கள பாத்துக்கணும் "ன்னு சொல்லி எந்த துனியா இருந்தாலும் குடுங்கன்னு அவரே முன்ன நின்னு வாங்குவாரு , 1o பைசா கூட பரவாயில்ல குடுங்கன்னு வாங்கி போட்டுக்குவாரு ,. ஒவ்வொரு பள்ளிகூடத்திலையும் யார் யார் கிட்டயோ பேசி செஞ்சி ரெண்டு புள்ளைகலயாவது சேத்து விட்டிருவாரு ,அவங்க படிப்பு செலவுக்கு நாங்கல்லாம் சஞ்சாயிகா ல சேர்த்து வைப்போம்.ரேடியாவில் கொழும்பு வானொலி நிலையத்துல " இருபது புலிகள் சுட்டு கொல்லப்பட்டனர் , ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார் " ன்னு சொல்லும்போதெல்லாம் கடக்கர அண்ணாச்சி ஞாபகம் தான் வரும் . "எல்லாமே புளுகுடே ௦, அப்பிடியே அத மாத்தி புரிஞ்சிக்கோ " ன்னு சொல்லுவார் .<br />கடக்கர அண்ணாச்சி மாரடைப்புல செத்துட்டாருன்னு கேட்டதுமே எங்கம்மா அழுத்திச்சு , எனக்கு மாரடைப்பு நோய் மேல ஏகப்பட்ட கோபம் வந்தது . டவுன் ஸ்கூல் போற வரைக்கும் ,மாரடைப்புங்கிறது ,கடக்கர அண்ணாச்சி மாதிரி நல்லவங்களுக்கும் , பெரியவங்களுக்கும் மட்டும் வர்ற நோயின்னே தான் நேனைசிகிட்டு இருந்தேன் .<br />அவரு இருக்கும் போது எங்க யாருக்குமே இப்ப தெரியிற ஈழ வரலாறுல ஒரு சதவீதம் கூட தெரியாது ,ஆனா ஊரே அவரு பின்னாடி நின்னு கைகொடுத்துச்சி , ஆனா இன்னைக்கு ஒரு நாள் முழுசும் பேசுற அளவுக்கு விஷயம் தெரியும் எல்லாருக்குமே , ஆனாஅப்ப செஞ்ச உதவியில ஒரு சதம் கூட இப்போ பண்ண முடியல , ஏன்னும் தெரியல . </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-9798419924346265762010-11-30T20:18:00.000-08:002010-11-30T20:34:17.954-08:00நடை பாதை நாயகர்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjifcdZ9wMkIB8U2todDXjRHT-YqN3ijI_ntCrJd4CMY9WvgP766AhK4E6owjDaGxSVyS3zCpX5TxymtHgNxS1eRkZmYFgq7mzo_bavEYLjbmC8QOodNaQ0XJ9PewW6OmorpqnknQbFl2Bu/s1600/c7cdace44a8b8bc3288c9a9f60d8_grande.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5545567482920631778" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjifcdZ9wMkIB8U2todDXjRHT-YqN3ijI_ntCrJd4CMY9WvgP766AhK4E6owjDaGxSVyS3zCpX5TxymtHgNxS1eRkZmYFgq7mzo_bavEYLjbmC8QOodNaQ0XJ9PewW6OmorpqnknQbFl2Bu/s400/c7cdace44a8b8bc3288c9a9f60d8_grande.jpg" border="0" /></a><br /><div>தார் கடலின் கரையில் நின்று<br />வாகன மீன் பிடிப்பவன் நான்<br /><br />ஒரு நொடி வியாபாரம் என்னை வாங்க<br />ஒரு நாள் விலை கொடுத்தவன் நான்<br /><br />நான் வாழ்வது கோடிகளில் -<br />வாடிக்கையாளர்களும் வாழுமிடமும்<br /><br />பலரின் பரிகசிப்பில் என் மனம் அழும்<br />சிலரின் பரிதாபத்தில் என் தன் மானம் அழும்<br /><br />நகர்தலும் நகர்த்துதலும் நகராமல் உள்ளன<br />நான் கண்ட நகரத்தின் பெயர்க்காரணம்<br /><br />நேற்று வராத மழையின் மண் வாசம்<br />இன்று வரும் நாயர் கடை பஜ்ஜி வாசம்<br />நிர்ணயிக்கின்றன<br />நான் விற்கும் பொருட்களின் விலையை </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-13900693330484678602010-11-29T00:56:00.000-08:002010-11-29T02:58:00.956-08:00ஓட்டு போட ஓடி வாங்க அண்ணாச்சி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlNZvDniM6jqxC8r1mqQ3ZVgf_cjMgi2i06bkc9au9INE-30L5ZNDCUCrglkQ40oroDYFp6EWKbF1ggu4jneMkwmFddlZZDWjZl_lOFlrueAr3xuqVKHCLjgxo02djHUjBcl5MEzpkG9mq/s1600/untitled.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5544897272445972482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 249px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlNZvDniM6jqxC8r1mqQ3ZVgf_cjMgi2i06bkc9au9INE-30L5ZNDCUCrglkQ40oroDYFp6EWKbF1ggu4jneMkwmFddlZZDWjZl_lOFlrueAr3xuqVKHCLjgxo02djHUjBcl5MEzpkG9mq/s320/untitled.bmp" border="0" /></a><br /><div>ஓடி வாங்க ஓடி வாங்க அண்ணாச்சி<br />ஓட்டு போட ஓடி வாங்க அண்ணாச்சி<br /><br />கட்டம் ஒன்னு கட்டியிருக்கோம் அண்ணாச்சி<br />கள்ளம் கபடம் இல்லாதது நம்மாச்சி<br /><br />அன்னாடம் செய்யாத வேலைக்கு 100 ரூவா<br />அரிசி வாங்க அய்யா உங்களுக்கு போதும் ஒரே ரூவா<br /><br />ஓட்டு ஒன்னுக்கு ஐயாயிரம் ரூவா<br />அதில்லாம க்வாட்டர் கட்டிங் 100 ரூவா<br /><br />கட்டிக்க கலர் கலரா வேட்டி சேலைங்க<br />காட்டிக்க கலர் கலர் டி வி பெட்டிங்க<br /><br />போனா வராதுங்க , டன் டனா டன் ஆப்பருங்க ,<br />டி வி யோட சேத்து 850 ரூவா கேபிள் இலவசங்க<br /><br />செவிக்குணவுன்னு சொன்னாரு வள்ளுவரு<br />செவிக்கும் கண்ணுக்கும் சேத்து உணவு தந்தவரு தலைவரு<br /><br />வேல வேட்டி இல்லாம வீட்டுலேய இருந்தா வரும் நோயிங்க<br />ஓசியில வைத்தியம் பாக்க காப்பீட்டு திட்டமுங்க<br />ஈசியா போறதுக்கும் வச்சிருக்கோம் 108 ங்க<br /><br />வடக்கு வாழ்ந்திச்சுங்க ,தெக்கு தேஞ்சிச்சுங்க<br />ஆரியர் அனுபவிச்ச சொத்தெல்லாம்<br />அசால்ட்டா கொண்டுவந்தோம் திராவிடருக்கு<br /><br />ஊர் ஊருக்கு நிலம் வாங்கியிருக்கோம் எங்க சொந்த செலவுல -</div><div> தப்பு தப்பு<br />சிங்கள அரசு கிட்ட இருந்து தமிழ் நாட்டு நிலங்களை காப்பாத்தியிருக்கோம்<br /><br />ஊர் ஊருக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டியிருக்கோம் </div><div>எங்க சொந்த செலவுல ,<br />மலிவு வெலையில நீங்க ஷாப்பிங் பண்ண<br /><br />உங்க நட்சத்திரம் எங்ககிட்ட பத்திரம்<br />புது புது சினிமா , பெரிய பேனர் சினிமா<br />வெளம்பரம் பண்ண நம்ம சேனல் , நல்ல சேனல்<br /><br />சிவனோட மகன் முருகன் மச்சான் கண்ணன்<br />மருமக வள்ளி , ரெண்டாவது மனைவி கங்கா<br />கடவுளோட சொந்தமும் கடவுள் தாங்க<br />எங்க தலைவரோட சொந்தமும் தலைவருங்க தாங்க<br />கடவுளா பாத்தா ஆத்திகம் ஆரியம்<br />தலைவரா பாத்தா நாத்திகம் திராவிடம்<br />இது தாங்க குடும்ப அரசியல் சூத்திரம்<br /><br />ஆயிரம் வடநாட்டுக்காரன் அடிக்க வேண்டிய அலைவரிசை அமௌன்ட்ட<br />ஒத்த ஆளா கொண்டு வந்தவரு நம்ம கூட்டாளுங்க<br /><br />ஒன்னவர் உண்ணா விரததுக்கே ஈழ விடுதலைன்ன<br />ஒரு நாள் புல்லா இருந்தா உலகத்துக்கே விடுதலைங்க<br /><br />ஒண்ணா ரெண்டா நாங்க செஞ்சதுங்க<br />ஒலகமே திரும்பி பாக்குது தமிழ் நாட்டங்க<br /><br />இன்னும் நாம உசரம் பாக்கணும் அண்ணாச்சி<br />அத இந்த உலகம் பாக்கணும் அண்ணாச்சி </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-90909121272483195532010-11-27T20:11:00.000-08:002010-11-27T21:01:41.721-08:00நில் - கவனி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3IkIlOezAGkPJXrze_hHGlo1QsKMS4H78T4odvauw-bVNEXTRP3zNVED1ucbe7O82EuSH703IcASowq8ooexiVkVj8Ff9u9OssPMGCB5NtVU0Vw8vV6i1ncxJiKPgzD4DFpVg4cPIknl5/s1600/Zimbabwe_strip_road.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5544461133449824434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 349px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3IkIlOezAGkPJXrze_hHGlo1QsKMS4H78T4odvauw-bVNEXTRP3zNVED1ucbe7O82EuSH703IcASowq8ooexiVkVj8Ff9u9OssPMGCB5NtVU0Vw8vV6i1ncxJiKPgzD4DFpVg4cPIknl5/s400/Zimbabwe_strip_road.jpg" border="0" /></a><br /><div>அதிகாலை நடைபயிற்சி<br />நடக்கும் பாதங்கள் , ஓடும் எண்ணங்கள்<br /><br />என்னை பார்த்து கொண்டே எதிரே ஓடிவரும் என் நண்பன்<br />ஓடவில்லை , மிதக்கிறான்<br /><br />சைக்கிளில் செல்லும் " இன்றே இப்படம் கடைசி "<br />ஹோண்டாவில் செல்லும் " காதல் ஓவியம் "<br />கவாசாகி சுமக்கும் " வெளிநாட்டு ரம் "<br />சுசிகியில் போகும் " சப்த ஸ்வரங்கள் "<br />டை கட்டி நடக்கும் " விண்ணப்ப படிவங்கள் "<br />பூச்சி மருந்தை சுமந்து செல்லும் தொழிலதிபரின் பென்ஸ்<br />மாருதியில் மையம் கொண்ட சாப்ட்வேர் புயல்<br /><br />கிளட்ச் பிடித்தலும், ப்ரேக் மிதித்தலும்<br />அலையும் மனதிற்க்கிடையே<br />அனிச்சை செயலாகிப்போனது<br /><br /><br />இந்திய சாலைகள் பலவீனமானது ,<br />செல்லும் வாகனங்களால் அல்ல<br />சுமக்கும் சோகங்களால்</div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-19645907134955845502010-11-26T10:59:00.000-08:002010-11-26T11:09:35.710-08:00நன்பேண்டா<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqu3EaHWwugVm-nd4J3n6R-iq58oxGZi04iY6oXgB7rkChOoNN0sIA_WffRSYqTEo4HTd-eXZT6lsAWP9WGCssyuf8i1NJQ10FdbpzSTPrP4KZc3MHchuNgHqFbUa7bdIhUCDJOGmS4J2f/s1600/best-friends24.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5543937621363252514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 359px; CURSOR: hand; HEIGHT: 308px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqu3EaHWwugVm-nd4J3n6R-iq58oxGZi04iY6oXgB7rkChOoNN0sIA_WffRSYqTEo4HTd-eXZT6lsAWP9WGCssyuf8i1NJQ10FdbpzSTPrP4KZc3MHchuNgHqFbUa7bdIhUCDJOGmS4J2f/s400/best-friends24.gif" border="0" /></a><br /><div>வாங்கும் முன்<br /><br />"மாப்ள உன் கையுலதாண்டா என் வாழ்க்கையே இருக்கு "<br />" இந்த உதவி நீ செய்யலேனா , நான் நடுத் தெருவுக்கு வந்துருவேண்டா "<br />" யாருட்டயாவது கடன் வாங்கியாச்சும் குடுறா "<br />" ஒரே வாரத்தில கொடுத்துருவேண்டா "<br />" எனக்கு வேற யாரையும் தெரியாதுடா "<br />" சத்தியமா சொன்ன தேதிக்கு முன்னாடியே தந்துருவேன் "<br />" தற்கொலை செய்யறதத்தவிர வேற வழியே இல்லடா "<br /><br />வாங்கிய பின்<br /><br />"அவன மாதிரி ஒரு பிரண்டு , சான்சே இல்ல மாப்ள "<br />" அருமையா பாடுறான் தெரியுமா "<br />" அவன பாத்தாலே எனக்கு சந்தோசமா இருக்குடா "<br />" என்னோட ஒரே ஆறுதல் அவன்தான் "<br />" எனக்குன்னு ஒருத்தன் இருக்கான்டா "<br /><br />தரும் முன்<br /><br />" டே மாப்ள , வண்டி ஒட்டுறேண்டா , ஒரு பத்து நிமிசத்துல கூப்பிடுறேன் "<br />" இல்ல மச்சான் இன்னொரு லைன்ல முக்கியமான கால் பேசிட்டு இருந்தேன் "<br />" மாப்ள சார்ஜு கம்மியா இருக்குடே , இப்பவே கூப்பிடுறேன் "<br />" 100 % நாளைக்கு தர்றேன் மாப்பள "<br />" வரவேண்டிய இடத்துல இருந்து வரல டா, நாளைக்கு வேற ஏதாவது பண்றேன் "<br />" ஆளு என்ன பாக்க வந்துகிட்டே இருக்கான் , மூணு மணிக்கெல்லாம் அக்கௌண்ட்ல போட்டுருவேன் "<br />"நான் அவனுக்கு தான் டயல் பண்றேன் , கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன் "<br />" உங்கள் அழைப்பு பார்வோர்ட் செய்ய படுகிறது "<br />" நீங்கள் டயல் செய்த என் தற்போது சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது "<br /><span class=""></span></div><br /><div>தந்த பின்<br /><br />" அவன் திமிரு புடிச்சவன்டா "<br />" பணத்திமிரு மனுசன எப்பிடியெல்லாம் மாத்துது பார் "<br />" மனுசங்கள சம்பாதிக்கலையே "<br />" பணத்தையும் சேத்தா தூக்கிட்டு போகபோறாங்க "<br />" அவன் சோத்துக்கு இல்லாமதான் சாவான் பாரு "<br />" அவன்கிட்ட காசு வாங்குனதுக்கு பதிலா நாலு பேருக்கு ......."</div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-19130539733812577872010-11-26T09:42:00.000-08:002010-11-26T09:56:30.698-08:00உப்பிற்கு சப்பாணி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPoBnqWzx3CwQPr_RYryEF-sDvvQX6203uT-TQfGbb_dHFMNTTHd_p9g10LS3TCS8KeLRFFtGBWzvppCMno0aJo8QFuaaREffDmuRILlypVi3L1TIEDnRtuqVhoVVakzqXlxcl_Ybfy491/s1600/pain.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5543918795091847218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 374px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPoBnqWzx3CwQPr_RYryEF-sDvvQX6203uT-TQfGbb_dHFMNTTHd_p9g10LS3TCS8KeLRFFtGBWzvppCMno0aJo8QFuaaREffDmuRILlypVi3L1TIEDnRtuqVhoVVakzqXlxcl_Ybfy491/s400/pain.jpg" border="0" /></a><br /><div>வியர்க்க வியர்க்க ஓடுகிறேன் , விரட்டி விரட்டி அடிக்கிறது<br /><span class=""></span></div><br /><div>வாழ்க்கை - வாழ தெரிந்தவர்களுக்கு மட்டும்<br /><br />ஏமாறுகிறேன் என்று தெரியும் , இருந்தும் ஏமாறுகிறேன்<br />இதையாவது ஒழுங்காக செய்கிறோமே என்ற திருப்தியுடன்<br /><br />பொய்யான சில வாசகங்கள் தான் என் குட்டி சந்தோசங்கள் -<br />"பணக்காரனுக்கு நிம்மதி இருக்காது "<br /><br />அடிமைபடுத்தும் கணவனிடம்<br />அமைதியாய் தோழமை தேடும் பெண்<br />தோழனாய் வாழ்பவனை<br />துப்பு கேட்டவன் என்கிறாள்<br /><br />குடிகார கணவனை " வீட்டில் வைத்து குடி " </div><br /><div>என்பாய் அன்பாய்<br />குடியா அன்பரை உப்பிற்கு சப்பாணி என்பாய் </div><br /><div>அடக்கு முறையாய்<br /><br />அன்பை பணத்தால் வாங்க முடியாது<br />சரிதான் - ஆனால் பணத்தால் வளர்க்கமுடியும்<br /><br />அடிமையாயிறு அல்லது அடிமைப்படுத்து -<br />இப்படித்தான் அமைகிறது வாழ்க்கை </div>PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.com0